India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் ரயில் நிலையத்தில், தபால் துறை சார்பில் இயங்கும், ஆர்எம்எஸ் என்னும் ரயில்வே மெயில் சர்வீஸ் தபால் வசதி இல்லை. கரூர் ரயில் நிலையத்தில் 1980 ஆண்டு முதல் ஆர்எம்எஸ் சேவை இயங்கி வருகிறது. இந்த மையத்தை திருச்சிக்கு மாற்றப்படுவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அந்த மையம் கரூரிலேயே இயங்க வேண்டுமென மத்திய ரயில்வே துறை இயக்குனருக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
1. மோகனூரில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் நடைபெற்றது.
2. ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் -வட்டாட்சியர் ஆய்வு
3. நாமக்கல்லில் 23ஆம் தேதி நடைபெறும் திமுக செயற்குழு கூட்டம்
4.நாமக்கல்லில் 25ஆம் தேதி கடையடைப்பு
5.மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன் கைது
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.38 கொண்டிசெட்டிபட்டி மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.37 பெரியப்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுப்ரமணியம் (9498173585), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி ஓடக்காடு பகுதியில், இயங்கும் சாயப் பட்டறைகளின் கழிவுகள் நெல் வயல்களில் புகுந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து விவசாய நிலத்தின் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானம் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி 25ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்வதாக முடிவு செய்தனர்.
நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ளது நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று துணை மேயர் பூபதிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை எம்பி ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாமக்கல்: குமாரபாளையம் பகுதியில் அதிகளவு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்த சீனிவாசன், ஸ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர்களை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ராசிபுரம் அடுத்த மோளப்பாளையம் கிராமத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 25, 26-ல் நடக்கவுள்ளது. இதில், விவசாயிகள், பெண்கள், புதிய தொழில் முனைவோர், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 98946-89809 என்ற எண்ணை அழைக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 8 கி.மீ. மற்றும் 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.