India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – சாந்தகுமார் (9498123060), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – ரெங்கசாமி (9487539119), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
பாரதிய கிசான் சங்கம் 6வது மாநில பிரதிநிதிகள் மாநாடு மற்றும் விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு இன்று மதுரை அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. மாநாட்டிற்காக சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் நாமக்கல்லிலிருந்து விவசாயிகள் பலர் வாகனத்தில் மதுரை சென்றனர். சென்று விவசாயிகளை பலர் வழியனுப்பி வைத்தனர்.
நவ. 25 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு நேற்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்ற திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு முன் திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் சந்தித்து, பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ்.பகுதியில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிரந்தர தொழிலாளர்கள் ஏராளமானோர் இன்று ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர். காகித ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்காததை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ. 1-இல் கிராமசபைக் கூட்டம் நடைபெற இருந்தது. பல்வேறு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (நவ.23) காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அடுத்த மெட்டலா அருகே நேற்று பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அங்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் நாமக்கல் ஆட்சித் தலைவர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே இன்று தனியார் பேருந்தும், லாரியம் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். மேலும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.