India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நன்னிலம் காவிரி வடிநில உபகோட்டம் நீர்வளத்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக ரெ.சுப்ரமணியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பாசன பிரிவில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் பதவி உயர்வு அடைந்து நன்னிலம் காவிரி வடிநில உபகோட்டம் செயற்பொறியாளராக நேற்று பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்று கொண்ட சுப்பிரமணியனுக்கு கடைமடைப்பகுதி விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் பரிசு கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டி நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவியருக்கான கிரிக்கெட் போட்டிகள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் விளையாட்டு மைதானத்தில் நாளை 12-ந் தேதி நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான கைப்பந்து மற்றும் வளைகோல் பந்து போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை நடக்கிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகையில் பருவமழை தொடங்கிய பிறகு பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெயில் சற்று தனித்து காணப்பட்டது. தொடர்ச்சியாக வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்க சுழற்சி, கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு ஆகியவை காரணமாக நாகையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் கடந்த இரண்டு வாரங்களாக நாகை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று நாகையில் 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.
நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடாத்தியுள்ளனர். கப்பலை கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் கார்த்தி, சண்முகம், தேவராஜ், ராமையன் உள்ளிட்ட 4 மீனவர்கள் காயம் அடைத்துள்ளனர். பின்னர் அவரைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வேதையில் உயர்கல்வி வழிகாட்டு முகாம் 13 மற்றும் 20 தேதிகளில் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வளாகத்திலும் நடைபெற உள்ளது. உயர்கல்வி பெறுவதற்கு தேவையான உடனடி சேர்க்கை கல்வி கடன் அரசு மூலம் வழங்கப்படும் எனவே அனைத்து பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை உயர் கல்வி பெறுவதற்கு உதவிடும் முகாமில் பங்கேற்று ஊறிய வழிகாட்டுதலை பெற்று உயர் கல்வி பெற வேண்டுமென நாகை ஆட்சியர் தெரிவித்தார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய குளம் வெட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை துரிதமாக திட்டமிட்ட காலத்தில் முடித்த பணியாளர்களை ஆட்சியர் பாராட்டியதோடு, இதேபோல ஆர்வத்தோடு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் வரை செல்லும் டெமு ரயில் வரும் செப்.11, 13, 15, 18, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருவாரூர் -காரைக்கால் இடையேயும், இன்று செப். 10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் -காரைக்கால் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவிகளுக்கு அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் செப். 10 மற்றும் செப். 11 தேதிகளில் ஆண்டவர் செவிலியர் கல்லூரி, பொரவாச்சேரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நாகை மாவட்டத்துக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் இன்று (செப்.10) நாகை மாவட்ட விளையாட்டரங்கம் மற்றும் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கு முன்பதிவு செய்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்குமாறு நாகை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாகையில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200 மனுக்களை பெற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் நாட்டுபுற கலைஞர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.