India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் செப்.17-ஆம் தேதி மூடவேண்டும் என ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்.17-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகளும் மூடவேண்டும்,யாரும் மது விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் 17.09.2024 அன்று ஒருநாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகளையும் மதுக்கூடங்களையம் மூடிட அரசு உத்தரவிட்டுள்ளது. மதுபான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்டத்தில் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தடகளம், இறகு பந்து, கபாடி, சிலம்பம், கேரம், கால்பந்து, கையுந்து பந்து ஆகிய போட்டிகள் நாளை 14ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கின்றன என்றும், போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வேளாங்கண்ணிக்கு திடீர் வருகை தந்தார். அவரை திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தனர்.
நாகை மாவட்டத்தில் போதை பொருட்களை உபயோகிப்பது மற்றும் விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவது தொடா்பாக ‘போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு’ கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்பொழுது, அனைத்துத் துறை அலுவலா்களும் போதைப் பொருள்கள் தொடா்பாக ஆய்வுகள் மேற்கொண்டு, காவல் துறைக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனறாா்.
நாகை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி காலை டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. 19 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் 18 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5882 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோருக்கு தேர்வு எழுதிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஒரு பிரிவாக மாற்றுத்திறனாளி ஆடவர் மற்றும் பெண்களுக்கு தடகளம், கபாடி, அடாப்டட் வாலிபால், இறகு பந்து, எறிபந்து, வீல் சேர், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நாளை 13ந்தேதி காலை நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதே போல் பள்ளி மாணவியருக்கான வலை கோல் பந்து போட்டியும் நாளை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் மின்னணு பண பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து விவசாயிகளும் மானிய விலையில் கூட்டுறவு வங்கிகளில் இடுபொருட்கள் வாங்கும் போது இந்த புதிய வசதியை உபயோகப்படுத்தி பயன் அடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை மாவட்ட மீனவ இளைஞர் கடலோர பாதுகாப்பு ஊர்க்காவல் படையில் தற்போது காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு (ஆண்கள்) 23.09.2024 அன்று நாகை ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியாக 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல், நற்குணம் மற்றும் நல்ல உடற்தகுதி உடையவராக இருத்தல் வேண்டும் என நாகை மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம்-3ஆம் சேத்தி சிங்கான்குத்தகை கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று வீடு கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.