Nagapattinam

News September 25, 2024

நாகையில் நாளை மின்தடை

image

நாகப்பட்டினம் துணைமின் நிலையத்தில் நாளை (செப்.26) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், நாகை நகரம், பீச் லையன், மேலக்கோட்டையாசல், அக்கரைப்பேட்டை கீச்சாகுப்பம், சால்ரோடு, புத்தர், மஞ்சக்கொல்லை, சிக்கல், பரவை, தெத்தி மற்றும் நாகூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

நாகையில் 2.30 கோடி மதிப்பிலான இடம் மீட்பு

image

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் உள்ள நவநீதேசுவர கோயிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்புகளில் நாகப்பட்டினம் இணை ஆணையர் அவர்கள் தலைமையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. காவல்துறை பாதுகாப்போடு இலாகா முத்திரையிடப்பட்டு கோயில் வசம் ரூ.2.30 கோடி மதிப்புடைய 11,000 சதுரடி கொண்ட இடம் ஒப்படைக்கப்பட்டது.

News September 25, 2024

நாகையில் 49 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

image

நாகை வட்டார போக்குவரத்து அதிகாரி காஞ்சனா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கே. பிரபு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், குமரேசன், இணையத்துல்லா, ரவி உள்ளிட்டோர் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி அருகே நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 49 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News September 25, 2024

நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கபடவுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்படிப்பில் சேர்வதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. மேலும் தகவலுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்- 6382436094 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

நாகை கண்காணிப்பு அலுவலர் நியமனம்

image

தமிழகம் முழுவதும் மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நாகை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியவர். தஞ்சையில் மாவட்ட ஆட்சியராகவும் பணி புரிந்துள்ளார்.

News September 24, 2024

நாகை மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பாக நாகை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி மற்றும் மாரத்தான் ஓட்ட போட்டிகள், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் போட்டிகள் நடத்தப்படும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

நாகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

image

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று 192வது ஆய்வை நாகப்பட்டிணம் தொகுதியில் மேற்கொண்டார். நாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள்,
வினாத்தாள் பாதுகாப்பு மையம், புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

News September 23, 2024

783 மனுக்களை பெற்று கொண்ட நாகை ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவித்தொகை, குடும்ப அட்டை மாற்றம், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 783 மனுக்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.

News September 23, 2024

இலுப்பூரில் ரூ.62 லட்சத்தில் புதிய கொள்முதல் நிலையம்

image

கீழ்வேளுர் அருகே இலுப்பூரில் ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இலுப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் எம்.எல்.ஏ, நாகை மாலி ஆத்மா தலைவர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

News September 22, 2024

நாகை அன்னை சத்யா காப்பக விவகாரம்: ஆட்சியர் தகவல்

image

நாகை அன்னை சத்யா அரசு காப்பகத்தில் உள்ள 5 மாணவிகளிடம், அதே இல்லத்தில் பணிபுரிந்து வந்த மனநல ஆலோசகர் தவறாக பார்ப்பதாக மாணவிகள், காப்பக கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். மேலும் காப்பக கண்காணிப்பாளரின் புகாரின் பேரில், மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டார். மேலும் காப்பகத்தில் புகார் தெரிவித்த குழந்தைகளுக்கு ஆறுதல்கூற 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்–டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!