India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நவீன் குமார் என்பவரின் வாரிசுதாரர் விக்னேஷ் குமார் என்பவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை நாகை ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். பணியினை சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், பட்டமங்கலம், ஆதமங்கலம், தெற்குபனையூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. 146 வீடுகள் கட்டாமலேயே பயனாளிகள் பெயரில் அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்வேளூர், நாகை, நாகூர், காரைக்கால் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால் – திருச்சி, காரைக்கால் – தஞ்சை வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் இன்று முதல் 31ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி திருச்சி – காரைக்கால் ரெயில் திருவாரூர் வரையும் காரைக்காலில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்கள் திருவாரூரில் இருந்தும் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பேபி தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 272 மனுக்களைப் பெற்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் என நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழாவான காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 2.10.24 ஒருநாள் தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் எப்.எல் -1, எப்.எல்-2, எப்.எல்-3. எப்.எல்-3ஏ. எப்.எல்.3-ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வருகின்ற 4ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கிறது.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
நாகை அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் பேக்கிரியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரித்ததாக, நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் நேற்று திடீா் ஆய்வு செய்தனா். பேக்கரி சுகாதாரமற்ற முறையிலும், உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமலும் கடை செயல்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் மீள பள்ளியில் சேர்த்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் இன்று (27.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
திருக்கண்ணபுரம் அங்காளம்மன் கோவிலை சேர்ந்தவர் நடராஜன் (57). கூலித் தொழிலாளியான இவர்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்துக் கொண்டார். நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.