India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா மற்றும் செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுரைத்தலின்படி அயர்லாந்து மாணவர்கள் மற்றும் உதவும் நண்பர்கள் அறக்கட்டளை மூலமாக பேரூராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு பணியின்போது உள்ள மன அழுத்தம் மற்றும் குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் போக்கும் பயிற்சி மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பையென தரம் பிரிக்கும் முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் அதன் தலைவர் காந்திராஜன் தலைமையில் வருகின்ற 8ந்தேதி நாகை மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, நெடுஞ்சாலை, சிறைச்சாலை, குடிநீர், நகராட்சி நிர்வாகம் இந்து சமய அறநிலைய துறை உள்ளிட்ட 10 துறைகளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மருங்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் மகள் துர்கா (வயது 21). இவர் திருவாரூரில் உள்ள திரு.வி.க கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் துர்கா கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இன்று வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வக்பு வாரியத்தில் பதிவு பெற்ற வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு ரூ.25,000 அல்லது 50 சதவீத மானியத்தில் இரு சக்கர வாகனங்கள் வாங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது. இமாம், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை அணுகி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண் இணைகளுக்கு தங்க தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கி வருகின்ற 21ந் தேதி நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இதில் பயன்பெற விரும்புவோர் உடன் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை (04.10.2024) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை எடுத்துரைக்கலாம் என தனது செய்தி குறிப்பில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
நாகை, தெற்கு பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவர் திமுகவை சோ்ந்த மகேஸ்வரன். இவரது காா் கண்ணாடியை மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவர் மீதும் போலீசார் வழக்கு பதியவுள்ளதாக தெரிய வந்தது. இதனால் மகேஸ்வரன் காவல் நிலையத்தில் விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நாகப்பட்டினம் பகுதியில் மகாத்மா காந்தியடிகள் 156வது பிறந்த நாள் விழா இன்று அக்டோபர் 2ந்தேதி பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கோவி.செழியன் பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன்படி நாளை 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் வருகை தருகிறார். அப்போது திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.
நாகை பட்டினச்சேரி கிராமத்தின் மீனவ பஞ்சாயத்தார் இரு பிரிவாக உள்ளனர். இதில் ஒரு பிரிவினர் அங்குள்ள சீராளம்மன் கோவில் திருவிழாவை இன்று நடத்த உள்ளனர். இதனால், இரு தரப்பு மீனவர்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது. அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு அனைவரின் பங்களிப்புடன் விழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மற்றொரு பிரிவினர் போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலனிடம் புகார் கொடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.