India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு ஆகிய புனித தலங்களுக்கு நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காகவும் மேற்கண்ட பகுதி மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதியாகவும் நாகர்கோவில் அல்லது திருநெல்வேலியில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரைக்குடி திருவாரூர் வழியாக புதிய ரயில் இயக்க வேண்டுமென நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமர் புரடக் ஷன் அன்ட் பாஸஞ்சர் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகையில் தொடர் கனமழை யை முன்னிட்டு, பீன்ஸ் அவரைக்காயின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.200, அவரைக்காய் ரூ.100, தக்காளி ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.60, பல்லாரி ரூ.50, தேங்காய் ரூ.60, மாங்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.55, முட்டைக்கோஸ் ரூ.40, கத்திரிக்காய் ரூ.40, வாழைக்காய் ரூ.6 (1) என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
வேதாரண்யம் உபகோட்டம் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மின்வாரிய விதிகளின்படி நடைபெறும் கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் சார்ந்த குறைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஏ.கே.அருண் கபிலன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் மக்களை பாதுகாத்திட காவல்துறை தயராக உள்ளது. மழையினால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்பட்டு உதவிகள் தேவைப்படுவோர் 8428103090 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்
நாகை மாவட்ட காவல் துறை சார்பில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் 22 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாகூர் வெட்டாற்றில் பயிற்சி ஒத்திகை நடைப்பெற்றது. இதில் மீட்பு பணிக்காக பயிற்சி பெற்ற 22 போலீசாரை நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலன் இன்று நேரில் சந்தித்து உரிய அறிவுரை வழங்கினார்.
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது. தேவையான மீட்பு பணியாளர்களும் உள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்றிரவு பார்வையிட்டார்.
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு “சிவகங்கை” என்ற பெயர் கொண்ட தனியார் பயணிகள் கப்பல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 15 மற்றும் 17ஆம் தேதி கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்படுவதாக சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 19.10.2024 சனிக்கிழமை நடைபெற உள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று (14.10.2024) நடைபெற்றது.
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு சம்பா பயிர்களுக்கான காப்பீடு செய்திட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன் பெற வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பேரிடர் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். அதன்படி அவசர உதவி எண் 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800-233-4233 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.