India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லை எனில் உரிமத்தை விட்டு கொடுப்பது தொடர்பாக தமிழ்நாடு பொதுவிநியோக திட்ட வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக மாற்றி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் வருகிற 11ந் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு ஆட்டு கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இந்த ஊசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆடுகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும் போது 4 மாதத்திற்கு குறைவான மற்றும் சினை ஆடுகள் நீங்கலாக அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போடுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
நாகையில் ராட்சச குடிநீர் குழாய்யை ஓட்டை போட்டு அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீர் திருடிய நாகை ஈ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியர் ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நீரை சட்ட விரோதமாக கடந்த 3 மாதங்களாக திருடியது ஆட்சியரின் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க மண்டலம் வாரியாக புதிய வாட்ஸ் அப் எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூர் திருக்குவளை, நாகப்பட்டினம் ஆகிய வட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது புகார்களை 9486111912 என்ற எண்ணிற்கு தெரிவித்து உரிய தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தொடர் மழை பெய்ததால் 3,000 மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தெற்கு வங்க கடல் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடிந்த பயிற்சியாளர்களுக்கு, தொழில்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வருகிற 11ஆம் தேதி நடைபெறுகிறது என நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார், பல்வேறு தொழில் பிரிவுகளில் தொழில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் தொழிற்பழகுர் பயிற்சிக்கு தேர்வு செய்யஉள்ளனர்.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா டிசம்பர் 2 தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. பல மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இந்த விழாவிற்கான அழைப்பிதழை தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது காஜி உசைன் , நாகூர் சித்திக் சேவை குழும தர்ம அறக்கட்டளை நிறுவனர் சித்திக் ஆகியோர் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளாரிடம் வழங்கி கந்தூரி விழாவில் கலந்து கொள்ள கேட்டு கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவ.16,17 மற்றும் 23,24 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க மற்றும் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முகாம் நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை தெரிந்து கொள்ள 1950 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு 3 மாத காலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடு மற்றும் ரூ.3000 வழங்கப்படும் எனவே தகுதியான இளைஞர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு 3 மாத காலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடு மற்றும் ரூ.3000 வழங்கப்படும் எனவே தகுதியான இளைஞர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.