India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகபட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் இன்று (20/11/2024) புதன்கிழமை காலை முதல் நாகையின் பல பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகையில் விடாமல் பெய்யும் கானமழையினால் நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகையில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.செல்வகுமார் சென்னை ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைப்போல், நாகப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் துணை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் வரும் நவ.26 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!
நாகையில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி அறிவித்துள்ளார். ஆட்சியரின் அறிவுரையை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமருகலை சேர்ந்தவர் உத்திராபதி (80). இவர் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கையில் பாம்பு கடித்துள்ளது. இதில் உத்திராபதி வலியில் கத்தியுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலைவாய்ப்பற்ற ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். SHARE IT
சென்னை முகாம் அலுவலகத்தில், இன்று நவம்பர் 19, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹுசைன் சாஹிப் இடம் வழங்கினார். உடன் இந்த நிகழ்வில் நாகூர் தர்கா நிர்வாக உறுப்பினர்கள் இருந்தனர்.
இ – சேவை மையங்களில் பொதுமக்கள் பெறும் சாதி இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கும் அதிக பட்சமாக ரூ.60-ம் முதியோர், விதவை உள்ளிட்ட ஓய்வூதிய சான்றுகளுக்கு ரூ.10-ம் திருமண உதவி திட்ட சான்றுகளுக்கு ரூ.120-ம், மின்கட்டணம் ரூ.1000 வரை ரூ.15ம் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.11.2024 காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஐடிஐ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்துக்கொள்ளலாம் என்று ஆட்சியர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் வரும் நவ.23-ஆம் தேதிக்குள் (சனிக்கிழமை) கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.