India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வில் வெற்றி பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் சிறப்பு பயிற்சியும் விடுதி வசதி மற்றும் பயிற்சிக்கான தொகை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி ஏ.கே.அருண் கபிலன் இ.கா.ப நேரில் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது.
நாகையில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 217 மனுக்களை பெற்ற அவர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் 2 மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
5 லட்சத்து 63 ஆயிரம் 153 வாக்காளர்களை கொண்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் 2,88,751, ஆண் வாக்காளர்கள் 2,74,370,மூன்றாம் பாலினத்தவர்கள் 32 பேர் உள்ளனர். இதில் 13,546 வாக்காளர்கள் நீக்கப்ட்ட நிலையில் தமிழகத்திலேயே மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி கருதப்படுகிறது. மொத்தமாக 1,76,505 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மினி மாநாட்டு கூடத்தில் 2024-25க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் இன்று வெளியிட்டார். இதில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் ,கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 63ஆயிரம்153 வாக்காளர்கள் உள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நாகை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்து நவ., டிச., அறுவடை செய்யப்பட்ட நிலையில் அறுவடை செய்த வயல்களில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்ய உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு சாகுபடி செய்யும் நெற்பயிருக்கு ஏப்ரல் மாதத்தில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நெற்பயிருக்கு மாற்றாக உளுந்து மற்றும் பச்சை பயிர் சாகுபடி செய்ய வேண்டுமென ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பராமரிப்பு பணிகள் காரணமாக 7, 8, 9 ஆகிய தேதிகளில் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர். எனவே கீழ்வேளூர் பகுதி பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்திட வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கேட்டு கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையை சார்ந்த எஸ்.கே.ஜி.ஏ.சேகர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். இணைந்த நாளிலிருந்து கட்சியின் கொள்கை முரணாக செயல்பட்டதால் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக நாகை மாவட்ட தலைவர் சுகுமாறன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் கட்சி நிர்வாகிகள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
திருக்குவளை ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் இல.பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு ஒன்றிய கவுன்சிலர் சுதாஅருணகிரி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கௌசல்யா இளம்பரிதி, ஊராட்சி செயலர் ஆரோக்கிய மேரி, ஊ.ம.து.தவைவர்,வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் உள்ள ஒரு தோப்பில் மயங்கி கிடந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில், மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இவ்வழக்கு தொடர்பாக சம்பவத்தில் ஈடுபட்ட ராமன்(27) என்பவரை கீழையூர் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.