India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாகையில் இருந்து 400 கி.மீ. தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
நாகை மாவட்டம்
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை அருகே கடந்த இருபதாம் தேதி கடலில் மீன்பிடிக்கும் போது தவறி விழுந்தார். சக மீனவர்கள் அவரை தேடி வந்தனர் இந்த நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை சேர்ந்த சண்முகநாதன் என்பவரது உடல் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் கரை ஒதுங்கியது என வேதாரண்யம்கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக கன மழை பெய்து வருகிறது. இதனிடையே ஃபெங்கல் புயல் நாகைக்கு தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு 8 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. இதனால் நாகையில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (27.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் அறிவித்துள்ளார்
மகளிர் மேம்பாடு மத நல்லிணக்கம் கலை அறிவியல் பண்பாடு கலாச்சாரம் பத்திரிக்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு அவ்வையார் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இது குறித்த முழுவிவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 9150057450 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெற நாகை மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 03.12.2024 செவ்வாய் அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 04365 – 1077 மற்றும் மாவட்ட ஆட்சியரின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 – 2334233 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை விவரம்: 300 ஆப்தமித்ரா தன்னார்வலர்கள். 5000 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 6 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள், 100 சமுதாயக்கூடங்கள் ஆக மொத்தம் 340 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா ஷரிப் பெரிய கந்தூரி விழா 02.12.2024 முதல் 15.12.2024 வரை நடைபெறுவதை முன்னிட்டு நாகூர் தர்காவிற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தம் செய்ய வாகன நிறுத்தக் கட்டணம் (Parking Fee) செலுத்த தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இஆப தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.