Nagapattinam

News November 30, 2024

திருச்சி – காரைக்கால் ரயில் இயக்க கோரிக்கை

image

திருச்சியில் இருந்து நாகூர் வழியாக காரைக்கால் வரை இயக்கப்பட்ட ரெயில்கள் ஆகஸ்ட் 1ந்தேதியில் இருந்து திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நாகூர் கந்தூரி விழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடரும் விழாக்களை ஓட்டி பயணிகள் நலன் கருதி திருச்சி – காரைக்கால் ரெயிலை டிசம்பர் முதல் மீண்டும் நாகை நாகூர் வழியாக இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

தர்கா கந்தூரி விழாவிற்கு 100 சிறப்பு பேருந்துகள்

image

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னை, திருச்சி கரூர், புதுக்கோட்டை மதுரை, சிதம்பரம். இராமநாதபுரம், தஞ்சாவூர். கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகை நாகூர் மற்றும் காரைக்கால் நாகூர் வழித்தடத்திலும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

நாகை வாலிபருக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

image

நாகப்பட்டினம் நகரம் 24 வது வார்டு அ.தி.மு.க செயலாளர் முனியையன் மகன் சுப்ரமணியன் என்பவர் நாகூர் பகுதியில் சாலையில் செல்லும் போது மாடுகள் குறுக்கே வந்து மோதியதில் சம்பவயிடத்திலேயே இன்று உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க பொதுசெயலாளர் பொதுச்செயலாளர் பழனிச்சாமி சுப்ரமணியன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

News November 29, 2024

Way2News எதிரொலி: தேவூர் சாலை சீரமைப்பு

image

கீழ்வேளூர்-தேவூர் சாலை கனமழையினால் சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலை நிலவுகிறது என இன்று (நவ.29) காலை Way2News-இல் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக, நாகை நெடுஞ்சாலைதுறை கோட்டப் பொறியாளர் உத்தரவின் பேரில், உதவி பொறியாளர்கள் மேற்பார்வையில் இன்று மாலை சாலை ஜே.சி.பி எந்திரம் கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது.

News November 29, 2024

நாகை மாவட்டத்தில் 90 கீ.மி வேகத்தில் காற்று வீசக்கூடும்

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட மாவட்டங்களில் 70-90 கீ.மி வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், நாளை நாகை மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழைவ வரை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

image

தென்கிழக்கு வங்கக்கடலில் நாகையில் இருந்து சுமார் 300 கீ.மி தொலைவில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது காரைக்கால்-புதுச்சேரி இடையே கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயலின் காரணமாக நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 29, 2024

நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

கனமழையால் பாதிக்கப்பட்டு பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் நெற்பயிர்களுக்கு, 4 கிலோ டி.ஏ.பி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில், முதல் நாள் கரைத்து வைத்து மறுநாள் வடிகட்டி, 2 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் அலுவலர்களை அணுகி பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News November 29, 2024

நாகை: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தியவர்கள் தமிழக அரசின் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்றும், தங்களது விண்ணப்பத்தினை நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்திட நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 29, 2024

நாகை மாவட்டத்திற்கு இன்று ‘ரெட் அலெர்ட்’

image

தென்கிழக்கு வங்ககடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புயலானது நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், மணிக்கு 8 கீ.மி வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் இன்று நாகை மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

நாகை மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை 

image

கால்நடை வளர்ப்போர், சந்தைப்படுத்துவோர் வாகன ஓட்டுநர்கள் கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கால்நடைகளின் எண்ணிக்கை ஏற்றி செல்வதற்கான காரணம், வாகனஎண், மருத்துவ சான்று ஆகியவற்றை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். வாகனத்தில் கால்நடைகளுக்கு போதிய வசதி இருக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!