Nagapattinam

News December 14, 2024

எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் வருகின்ற 27ந்தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கிறது. இதில் நாகை மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் உபயோகப்படுத்தும் நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.

News December 13, 2024

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் 17.8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

கோடியக்கரையில் 17.8 செ.மீ மழை பதிவு

image

நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 78.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 17.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 6.3 செ.மீ, திருப்பூண்டி 9.4 செ.மீ, வேளாங்கண்ணி 10.5 செ.மீ, திருக்குவளை 9.9 செ.மீ, தலைஞாயிறு 14.6 செ.மீ, வேதாரண்யம் 10.0 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

News December 12, 2024

செம்பியன்மகாதேவியில் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி

image

செம்பியன்மகாதேவியை சேர்ந்த முருகதாஸ் கூரை வீட்டில் மனைவி மற்றும் மகன் – மகளுடன் வசித்து வருகின்றனர். மகன் கவியழகன் செம்பியன் மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த முருகதாஸ் மகன் கவியழகன் மீது சுவர் விழுந்தது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் தந்தை தங்கை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

News December 12, 2024

மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதற்கு எதிரான பிரசாரம்

image

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறவுள்ளது. அந்த வகையில் திருக்குவளை வட்டம் எட்டுக்குடியிலும், 17ந்தேதி மணக்குடியிலும், 18ந்தேதி ஆலங்குடியிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என ஆட்சியர் பா.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

image

உலக பிரசித்தி பெற்ற நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை (டிச.12) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். செய்தியை ஷேர் செய்யவும்!

News December 11, 2024

நாகை மக்களுக்கு எஸ்.பி. முக்கிய தகவல்

image

நாகை மாவட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகள் குறித்து 8428103090 என்கின்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் சூப்ரண்ட் அருண் கபிலன் தெரிவித்தார.

News December 11, 2024

இலங்கையில் தமிழக மீனவர்கள் விடுதலை

image

நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த 2ஆம் தேதி கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று மதியம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. விடுதலையான மீனவர்கள் 12ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்து, அதன் பின் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

News December 10, 2024

நாகை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை-தமிழகம் நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11, 12, 13 மற்றும் 16-ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உடனே ஷேர் செய்யவும்!

News December 10, 2024

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான தொண்டாற்றிய தகுதியானவர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு 15.12.2024க்குள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசு பணியாளர்களின் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!