Nagapattinam

News January 29, 2025

நாகப்பட்டினம் த.வெ.க செயலாளருக்கு வாழ்த்து

image

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் நாகப்பட்டினம் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக மா.சுகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்து அவருக்கு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். 

News January 29, 2025

வேளாங்கண்ணியில் புதிய கட்டிடத்தை திறந்த முதல்வர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி சிவன்கோவில் அருகில் வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 29, 2025

உளுந்து, பயறு வகைகளை காப்பீடு செய்ய கடைசி நாள் அறிவிப்பு

image

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பயறு வகைகளை பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிரை பயிர் காப்பீடு செய்யலாம். இந்த பயிர் காப்பீடு செய்வதற்கு பீரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.89 ஆகும். அதன்படி நாகை மாவட்டத்தில் உளுந்து, பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு பிப்.17-ஆம் தேதியே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் 3-ஆம் கட்டமாக 30 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனங்குடி, அம்பல், போலகம், எரவாஞ்சேரி மற்றும் கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..

News January 28, 2025

 மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்

image

வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் பாலா என்கிற வீரபாலன் (23). சாலை விபத்தில் இவர் உயிரிழந்த நிலையில் இவரது உடலை தானம் செய்ய அவரது தாய் முன் வந்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் விதமாக இறுதி சடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்.எல்.ஏ வி.பி.நாகை மாலி, கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர்.

News January 27, 2025

மூளை சாவு அடைந்தவருக்கு எம்.எல்.ஏ மரியாதை

image

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் வீரபாலன் விபத்தினால் மூளை சாவு அடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் வழங்கினர். இதனை ஆறு நபர்களுக்கு உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சி.பி.எம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிபாசு உடன் இருந்தனர்.

News January 27, 2025

திருமருகல் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

image

நாகை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்டமாக தொடங்கப்படுகிறது. இதில் வருகின்ற 30ந்தேதி திருமருகல் ஒன்றியத்தில் ஏனங்குடி, அம்பல், போலகம், எரவாஞ்சேரி, மற்றும் கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் நடக்கிறது. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 27, 2025

நாகை மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதன்மை கூட்டரங்கில் 14.02.2025 அன்று காலை 10:30 மணிக்கு ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. திருச்சி கருவூல கணக்குத்துறை இணை இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். ஓய்வூதியர்கள் தங்கள் குறை தொடர்பான மனுக்களை 31.01.25க்குள் அனுப்பி வைக்குமாறு நாகை மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 27, 2025

கீழ்வேளூர்: மூடப்பட்ட ரயில்வே கேட்

image

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் 27/01/2025 திங்கட்கிழமை இன்றும் 28/01/2025 நாளை செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மூடப்பட்டுள்ளது. மக்கள் மாற்று பாதையில் செல்லுமாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

News January 27, 2025

நாகை: 104 நிறுவனங்கள் மீது வழக்கு

image

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று (ஜன.26) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு முறையாக விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்காத 60 கடைகள், 43 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் நிறுவனம் என மொத்தம் 104 நிறுவனங்கள் மீது அதிரடியாக வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!