India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டம் தகடூர் அருகே செங்காத்தலை பாலம் அருகில் செட்டிகுளம் பச்சையங்காடு பகுதியே சேர்ந்த மூதாட்டி அரசு பேருந்தில் பயணித்துள்ளார் இவர் படிக்கட்டில் தவறி கீழே விழுந்து அரசு பேருந்து டயர் தலையில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் இணைந்து வந்து உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
நாகை வடக்கு பால் பண்ணைச்சேரியை சேர்ந்தவர் திருநங்கை ரஃபியா 2018 முதல் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், நேற்று டெல்லியில் ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, பிரேசில் உள்ளிட்ட 15 நாடுகள் பங்கேற்ற திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில், மிஸ் யுனிவர்ஸ் ட்ரான்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் தர்ம கோவில் தெருவில் உள்ளது. இது நீண்ட காலமாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து இந்து சமய துறை இணை ஆணையர் குமரேசன் உத்தரவின் பேரில் துணை ஆணையர் ராணி மேற்பார்வையில் மேற்கண்ட இடம் மீட்கப்பட்டு கோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. SHARE செய்யவும்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, தமிழக அரசு சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் டிசம்பர் 26, 27 தேதிகளில் காலை 10.30 மணிக்கு நாகை மாவட்ட நூலகத்தில் நடக்கிறது. விவரங்களுக்கு 9791931179 தொடர்பு கொண்டு 22ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய நாகை ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
நரிமணம் அருகே பனங்குடி CPCL நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் பலவித பேச்சுவார்த்தை போராட்டம் என்று நடத்தியும் இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே இன்று 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுடன் இணைந்து நில நிர்வாக ஆணையருக்கு பதிவு அஞ்சல் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்தும் மாற்றத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றார். அப்போது 142 மனுக்களை பெற்ற ஆட்சியர் அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் நாகை மாவட்ட கிராமப்புற மகளிருக்கு 30 நாட்கள் இலவசமாக ஆரி ஒர்க், எம்ப்ராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர விரும்புவோர் 8870940443/6374005365 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட 18,000 கன அடிக்கும் மேலான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இது 60,000 கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றுநீர் காவிரி வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட திருமருகல் அரசலாற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இதனால் முதலைகள் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீர் 18000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இது 60000 கன அடி உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. கொள்ளிடம் ஆற்றுநீர் காவிரி வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட திருமருகல் அரசலாற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இதில் முதலைகள் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நாகை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
EVKS இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவை ஒட்டி நாகையில் இன்று நாகை எம்.எல்.ஏ ஆளுர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு வளர்த்தவர், அரசியல் களத்தில் பெரியாரியத்தை பின்பற்றியவர், ஆதிக்கத்தை எதிர்த்து துணிந்து முழங்கியவர் இளங்கோவன். இவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.
Sorry, no posts matched your criteria.