Nagapattinam

News January 9, 2025

நாகப்பட்டினம்: மது பிரியர்கள் கவனத்திற்கு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவள்ளுவர் நாள் மற்றும் குடியரசு நினைத்தை முன்னிட்டு (15.01.2025) மற்றும் (26.01.2025) ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகளும்  விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினத்தில் மது கடைகள் திறக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

நாகையில் 2,17,631 பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு 386 நியாய விலை கடைகள் மூலம் 2,17,631 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் 217.631 டன் பச்சை அரிசியும், 217.631 டன் சர்க்கரையும் 2,17, 631 முழு கரும்பும் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

நாகையில் பொங்கல் தொகுப்பு இன்று முதல்

image

நாகை, பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதற்காக கடந்த 3ஆம் தேதி முதல் நேற்று வரை டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. திருவாரூரில் இருந்து நாகைக்கு வந்த கரும்பு கட்டுகளை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

News January 9, 2025

BREAKING: நாகை மீனவர்கள் 10 பேர் கைது

image

நாகையில் இருந்து மீன் பிடிப்பதற்காக 10 மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 10 மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

News January 8, 2025

விவசாயிகளுக்கு புல் கரனைகள் வழங்கிய ஆட்சியர்

image

கீழ்வேளூர் வட்டம் காமேஷ்வரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் இன்று காலை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கினார். இதில் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் புல் வெட்டும் கரணைகளை  வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராம் சரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News January 8, 2025

நாகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது

image

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்து காட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

News January 8, 2025

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்பட்டுவரும் காணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இயற்கை உணவகம் அமைப்பது குறித்து ஆட்சியர் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

News January 7, 2025

கல்லூரி மாணவர்களுக்கு மணற்சிற்ப போட்டி

image

நாகை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆமைகள் பற்றிய விழிப்புணர்வு மணற்சிற்ப போட்டி, நாகை பழைய கடற்கரையில் வரும் 11ஆம் தேதி காலை நடைபெறுகிறது. வெற்றி பெறுவோருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நாளை (ஜன.8) 9626669514, 8754 653202 என்ற எண்ணில் முன் பதிவு செய்து விவரங்கள் அறியலாம் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார். SHARE IT

News January 7, 2025

வாக்காளர்கள் தொடர்ந்து திருத்தம் செய்யலாம்

image

நாகை மாவட்டத்தில் ஜனவரி 1 ந்தேதியை தகுதி நாளாக கொண்டு நடைபெற உள்ள தொடர் திருத்தத்தில் பொதுமக்கள் தங்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களிலோ அல்லது http://voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News January 7, 2025

இலங்கை எல்லைக்குச் சென்ற 9 தமிழகம் மீனவர்கள் மீட்பு

image

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க டிச.29 ஆம் தேதி அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் டிச .30 அதிகாலை படகு எஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக இலங்கை எல்லைக்குச் சென்ற அவர்களை உரிய அனுமதியுடன் மீட்ட இந்திய கடலோர காவல் படையினர் நாகை துறைமுகத்திற்கு நள்ளிரவு 1.30மணிக்கு அழைத்து வந்தனர்.

error: Content is protected !!