India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகூரை அடுத்த வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அவ்வழியே நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த கோமதி (37) மற்றும் வெளிப்பாளையம் ராமநாயக்கன்குள பகுதியைச் சேர்ந்த இந்திரா (67) ஆகிய இருவரும் 110 லிட்டர் புதுவை சாராயம் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து நாகூர் காவல்நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் அதே பகுதியை சேர்ந்த எலன்மேரி இருவரும் வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கிள் உள்ளனர். இந்த நிலையில் ஜனார்த்தனின் நண்பர்கள் சாகர் மற்றும் ஜீவா இருவரும் வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று நண்பர்களுடன் ஜனார்த்தன் சென்ற நிலையில் அவரை ரயில்வே ஸ்டேஷன் அருகே கல்லால் அடித்தும் உடைந்த பாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளனர். இருவரும் தஞ்சாவூரில் கைது ஆகியுள்ளனர்.
நாகூரை அடுத்த வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே நாகை வெளிப்பாளையம் கோமதி (வயது 37) வெளிப்பாளையம் ராமநாயக்கன்குள பகுதியை சேர்ந்த இந்திரா (வயது 67) 110 லிட்டர் புதுவை சாராயம் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <
நாகையில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்தநிலையில், வட்ட அலுவலகங்களுக்கு https://tamilnilam.tn.gov.in/citizen நேரில் செல்லாமல், புதிய வசதியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படை வீரர் மற்றும் சார்ந்தோர் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் தொடர்பான கருத்தரங்க கூட்டம் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 12.3.25 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்க கூட்டத்தில் நடைபெற உள்ளது. 19.3.25 நடக்க இருந்த கருத்தரங்க கூட்டம் நிர்வாக காரணங்களினால் முன்கூட்டியே 12.3.25 என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
நாகை மாவட்டத்தில் பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் இதுவரை பயன் பெறாத விவசாயிகள் ஜனவரி 2019க்கு முன் தன் பெயரில் உள்ள சொந்த நிலத்திற்கான ஆவணங்கள் மற்றும் ஆதார் எண்ணுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்து ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளாக பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் புதிய கடற்கரையில் நடத்தப்படுகின்றன. மகளிருக்கு 15 மற்றும் 22 தேதிகளிலும் ஆண்களுக்கு 16 மற்றும் 23 தேதிகளிலும் நடக்கின்றன. ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 9342499783 மற்றும் 96293-70402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்கு ஊராட்சி மன்றம் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்கான தனித்துவ அட்டை பெற மார்ச் 15 கடைசி தேதி என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.