India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள திருமணங்குடி வடபாதி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரகு (30) நேற்று (ஜன.24) காலை குளத்திற்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு முகாம் நாளை (ஜன.25) நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாகை வட்ட வழங்கல் அலுவலர் ரகு தெரிவித்துள்ளார்.
நாகை, திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 23 பேருக்கு முழுமையாக கட்டி தரவில்லை. வீடு கட்டி தருவதற்கான இறுதி கட்ட பணத்தை அதிகாரி பெற்றுக்கொண்டு பணி மாறுதலில் சென்ற காரணத்தினால் நடவடிக்கை எடுக்க கோரி, கிரம சபை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
நாகை மாவட்டத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை முறைப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியதன் பேரில், ஒரு மணி நேரத்திற்கான வாடகையாக ‘பெல்ட் டைப்’ அறுவடை எந்திரங்களுக்கு ரூ.2,500-ம், ‘டயர் டைப்’ அறுவடை எந்திரங்களுக்கு ரூ.1,800-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக வாடகை வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை பெல்ட் டைப் அறுவடை இயந்திரம் வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.2500/, டயர் டைப் அறுவடை இயந்திரம் வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1800/-எனவும் , வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரம் பெல்ட் டைப் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880, டயர் டைப் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நாகை பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நேற்று நடந்தது. அதில் நடுவராக இருந்த போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி, “வாகனங்கள் ஓட்டும்போது இளைய தலைமுறையினருக்கு நிதானம் அவசியம். வாகனங்களில் அலட்சியமாகவும், அவசரமாகவும், வேகமாகவும் பயணிக்க வேண்டிய தேவை இல்லை என அறிவுறுத்தினார்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2768 இடைநிலை ஆசிரியர் பணிக்கு கடந்த 21.7.2024 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. சுமார் 200 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலம் தாழ்த்து வதாக கூறி தேர்வர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தங்களின் கோரிக்கை சம்மந்தப்பட்ட அதிகரிக்களுக்கு அனுப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததாக தேர்வர்கள் கூறினர்.
வேதாரண்யம் செம்போடை தோப்புத்துறை கரியாபட்டிணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் வரை தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து பொங்கலின் போது கிலோ ரூ.40 வரை விற்றது. தற்போது வரத்து அதிகரித்ததால் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் ஒரு கிலோ ரூ.10 என வீழ்ச்சி அடைந்து விற்பனை செய்யப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று (ஜன.26) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு, அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், இயற்கை மூலிகை, சிறுதானியம் உணவுப் பொருட்கள், மதிப்பீடு பயிற்சி, அழகுக்கலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த பயிற்சிகளில் பங்கேற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ள பயனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. share it now..
Sorry, no posts matched your criteria.