India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் Drug Free TN என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் போதை பொருள் விற்பவர்களை ரகசியமாக இதன் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோர் திட்டம், பிரதான் மந்திரி அனுஷித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம், கல்விக்கடன் திட்டம் போன்றவற்றில் பயன் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.3) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது நாகை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சுனாமியில் மீட்டகப்பட்ட குழந்தைகளான சவுமியா மற்றும் மீனாவை அரவணைத்து காப்பகத்தில் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.2) இரண்டாவது மகள் மீனாவிற்கு, வங்கி ஊழியர் மணிமாறன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது ராதாகிருஷ்ணன் கண்கலங்கினார்.
காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சி வரை சென்று வந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை – புனலூர் விரைவு ரயிலை காரைக்கால் வரை இயக்க வேண்டும் என நாகூர் – நாகை ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையங்கள் துறை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் நாகரத்தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கோயில் செயல் அலுவலர் மற்றும் நாகப்பட்டினம் நகர போலீசாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி பிரதான சாலையில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த சிவக்குமார் என்பவர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விபத்து எச்சரிக்கை பலகையில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில்கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கோழி காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வருகின்ற பிப்ரவரி 1 முதல் 14 வரை நடைபெற உள்ளது. எனவே கோழி வளர்ப்போர் மற்றும் பண்ணை வைத்திருப்போர் இந்த முகாம்களில் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் . தாட்கோ சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்த தகவல் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகி பொதுமக்கள் பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப. ஆகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6. 2 2025 வியாழன் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.