India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேதாரண்யம் அருகே மணவாக்கால் பகுதி கடற்கரைக்கு முட்டையிட வந்த 40 கிலோ எடை கொண்ட ‘ஆலிவ் ரிட்லி’ என்ற அரியவகை ஆமை ஒன்று நேற்று (ஜன.29) கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலையில் சிக்கியது. இதனை அடுத்து வலையில் சிக்கி தவித்த அந்த ஆமையை கண்ட அப்பகுதி மீனவர்கள் சிலர், அதனை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
கீழ்வேளூர் போலீசார் ஆழியூர் பிரிவு சாலை மற்றும் ஓர்குடி பாலம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இருவேறு நபர்களிடம் இருந்து இருந்து 118 லிட்டர் மற்றும் 120 லிட்டர் என மொத்தமாக 238 லிட்டர் கடத்தல் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் (43) என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் நாகப்பட்டினம் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக மா.சுகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்து அவருக்கு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி சிவன்கோவில் அருகில் வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பயறு வகைகளை பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிரை பயிர் காப்பீடு செய்யலாம். இந்த பயிர் காப்பீடு செய்வதற்கு பீரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.89 ஆகும். அதன்படி நாகை மாவட்டத்தில் உளுந்து, பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு பிப்.17-ஆம் தேதியே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் 3-ஆம் கட்டமாக 30 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனங்குடி, அம்பல், போலகம், எரவாஞ்சேரி மற்றும் கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..
வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் பாலா என்கிற வீரபாலன் (23). சாலை விபத்தில் இவர் உயிரிழந்த நிலையில் இவரது உடலை தானம் செய்ய அவரது தாய் முன் வந்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் விதமாக இறுதி சடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்.எல்.ஏ வி.பி.நாகை மாலி, கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் வீரபாலன் விபத்தினால் மூளை சாவு அடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் வழங்கினர். இதனை ஆறு நபர்களுக்கு உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சி.பி.எம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிபாசு உடன் இருந்தனர்.
நாகை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்டமாக தொடங்கப்படுகிறது. இதில் வருகின்ற 30ந்தேதி திருமருகல் ஒன்றியத்தில் ஏனங்குடி, அம்பல், போலகம், எரவாஞ்சேரி, மற்றும் கொட்டாரக்குடி ஆகிய ஊராட்சிகளில் நடக்கிறது. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதன்மை கூட்டரங்கில் 14.02.2025 அன்று காலை 10:30 மணிக்கு ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. திருச்சி கருவூல கணக்குத்துறை இணை இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். ஓய்வூதியர்கள் தங்கள் குறை தொடர்பான மனுக்களை 31.01.25க்குள் அனுப்பி வைக்குமாறு நாகை மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.