Nagapattinam

News February 15, 2025

தீராத கடன் பிரச்சினை இருக்கா – இந்த கோயிலுக்கு போங்க

image

கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு.

News February 15, 2025

விழுந்தமாவடியில் இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ டால்பின்

image

விழுந்தமாவடி -மணல்மேடு கடற்கரையில் சுமார் 5 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இந்த டால்பினை அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆழ்கடலில் நீந்தும் போது ஏதேனும் கப்பல் அல்லது பாறைகளில் மோதியோ மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

News February 15, 2025

தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆயக்காரன்புலம் -3 ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பரிசுகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  இன்று 14.2 2025 இன்று வழங்கினார்கள்.

News February 14, 2025

கீழ்வேளுர் அருகே டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு

image

கீழ்வேளூர் ரயிலடி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையை அங்கிருந்து மாற்றம் செய்து பைபாஸ் சாலையில் திருக்கண்ணங்குடி அருகில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து திருக்கண்ணங்குடி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

News February 14, 2025

திருப்பூண்டியில் தொழு நோய் கண்டறியும் முகாம்

image

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கிராமத்தில் தொழு நோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ஆம் தேதி வரை களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளனர். எனவே பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு செய்து தொழு நோய் இல்லாத நாகை மாவட்டம் எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்று ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News February 14, 2025

நாகை: ரூ.30000 சம்பளத்தில் போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாகை மாவட்டத்தில் மட்டும் 33 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

நாகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 21ந் தேதி வெள்ளிகிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், மகளிர் இதில் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

News February 13, 2025

நாகையில் தொழுநோய் முகாம்

image

நாகப்பட்டினம் மாவட்ட வட்டாரங்களில் தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் 13.2.25 முதல் 28.2.25 வரை நடைபெற உள்ளது. தொழு நோயின் அறிகுறிகள் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற அரிப்பில்லாத தேமல், நரம்புகள் தடித்து செயலிழந்து இருத்தல், கை கால் வலி இல்லாத புண்கள் இருத்தல், தோல் பரிசோதனை மூலம் நிரூபணம் செய்தல் இந்த அறிகுறிகள் இருந்தால் களப்பணியாளர்களிடம் தெரியப்படுத்தலாம். மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

நாகை கலங்கரை விளக்கத்தின் சிறப்பு

image

தமிழக கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் நாகை கலங்கரை விளக்கம் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. நாகையில் 1985ம் ஆண்டு 48 மீ உயரமுடைய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வங்க கடலின் அழகையும், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரத்தை பார்வையிட்டு ரசிக்க முடியும். 163 அடி உயரம் கொண்டு தலை நிமிர்ந்து நிற்கும் நாகையின் அடையாளம். SHAREIT

error: Content is protected !!