Nagapattinam

News February 9, 2025

அம்பல்: நேரடி கொள்முதல் நிலையம் கட்டுமான பணி

image

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அம்பல் பொறக்குடி ஊராட்சி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதன் பணிகளை திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் இன்று பிப்ரவரி .08 ஆய்வு செய்தார். துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். இதனால் விவசாயிகளுகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News February 8, 2025

பென்காக் சிலாட் போட்டியில் வெள்ளிபதக்கம்

image

பென்காக் சிலாட் போட்டியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கனிமொழி வெள்ளி பதக்கம் வென்றார். தற்காப்பு கலைகளில் ஒன்றான பென்காக் ஸ்லாட் போட்டியில் பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 7 வரை தமிழ்நாடு கொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற கெலோ இந்தியா மகளிர் லீக் 2025 இல் நாகையை சேர்ந்த கனிமொழி என்பவர் வெள்ளி பதக்கம் மற்றும் 4000 ரொக்கம் பெற்று நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பயிற்சியாளர் கே.ரமேஷ் பாராட்டினார்.

News February 8, 2025

நாகையில் ஏலத்திற்கு வரும் வாகனங்கள்

image

நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பிடிபட்ட 104 வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி காலை 10 மணிக்கு பழைய வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து ஏலத்தில் பங்கேற்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

விரால் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி

image

நாகை மாவட்டம் தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற பிப்-18ம் தேதி அன்று ‘விரால் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்கள் பெயர்களை விண்ணப்ப படிவத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News February 8, 2025

நாகப்பட்டினம்: மதுபான கடைகள் மூடப்படும்

image

நாகை மாவட்டத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு 11.2.2025 செவ்வாய் அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

News February 8, 2025

போதை பொருள் பற்றி புகாரளிக்க புதிய செயலி: நாகை கலெக்டர்

image

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசின் முயற்சியில் ‘DRUG FREE TN’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருட்களை பதுக்கு வைத்திருக்கும் இடங்கள் குறித்த தகவல்களை இச்செயலி மூலமாக புகாராக தெரிவிக்கலாம். மேலும் புகாரளிக்கும் நபரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

நாகை: மின்சாரம் தாக்கி நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு

image

கீழ்வேளூர் ஆவராணி காலனியை சேர்ந்த சிவகுருநாதன் (32) தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்யும் போது எதிர்ப்பாராத வகையில் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் இறந்து விட்டதாக உயிரிழந்தார். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 7, 2025

நாகப்பட்டினம்: வீட்டுமனை பட்டா கேட்ட திருநங்கைகள்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறை தீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 17 திருநங்கைகள் தங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, சுய தொழில் செய்வதற்கு வங்கி கடன் உதவி வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News February 7, 2025

கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப, அவர்கள் இன்று (07.02.2025) தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

News February 7, 2025

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை முகாம் ஒத்திவைப்பு

image

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தைப்பூச விழாவை முன்னிட்டு வருகின்ற பிப்.11 அன்று ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற இருந்த முகாம், பிப்.18 செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!