Nagapattinam

News April 25, 2025

நாகை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தொழிலாளர் தினம் வருகின்ற மே.1ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து வகை அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். இதனை மீறி அன்றைய தினம் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்

News April 24, 2025

இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

image

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!

News April 24, 2025

நாகை: ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட தேதி நாளையுடன் (ஏப்.25) முடிவடைகிறது. எனவே நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News April 24, 2025

நாகை: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 24, 2025

சாலையோர உணவு கடைகளில் திடீர் ஆய்வு

image

நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள உணவு கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பல்வேறு கடைகளில் பயன்படுத்திய சமையல் எண்ணெய்கள் தரமாக இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கீழே ஊற்றப்பட்டது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிக்கனில் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

News April 23, 2025

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒருங்கிணைப்பு கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவற்கான (ABC) திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News April 23, 2025

நாகை: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

image

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!

News April 23, 2025

அங்கன்வாடியில் அரசு வேலை

image

நாகை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து நாளைக்குள் (ஏப்.24) விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 23, 2025

விளையாட்டு விடுதியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இதன் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் 21.4.25 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மே.5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 04365-253059 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News April 22, 2025

TNPSC G-1 & TNUSRB-SI தேர்விற்கான இலவச பயிற்சி

image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப் -1மற்றும் TNUSRB_SI தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 23.4.2025 புதன் முதல் தினசரி பிற்பகல் மூன்று மணி முதல் 6:00 மணி வரை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடத்திட்ட வாரியாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!