Nagapattinam

News March 2, 2025

+2 பொது தேர்வு எழுதும் 6,689 மாணவர்கள்

image

நாகை மாவட்டத்தில் நாளை +2 தேர்வு தொடங்குகிறது. இதில் 3,002 மாணவர்கள் 3,687 மாணவியர்கள் என 6,689 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என 671 பேர் ஈடுபடுகின்றனர் என மாவட்ட கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News March 2, 2025

கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ‘ட்ரோன்’ சேவை

image

இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது மீனவர்கள் மாயமாகும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு புதிய முயற்சியை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி, கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க முதல் முறையாக ‘ட்ரோன்’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ‘ட்ரோன்’ மூலம் 100 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 1, 2025

திருநங்கைகளுக்கு ரூ.50 ஆயிரம் மானியம்

image

நாகை மாவட்டத்தில் திருநங்கைகள் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுய தொழில் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள விரும்பும் திருநங்கைகளுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலான மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. நம் மாவட்டத்தில் இதுவரை 43 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

நாகை மாவட்டம் உருவானது எப்படி?

image

நாகப்பட்டினம் 18.10.1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. 1658-ல் டச்சுக்காரர்கள் நாகையை போர்ச்சுகீசியர்களிடமிருந்து கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.15-01-1662 தஞ்சாவூரில் இருக்கும் ராஜா விஜய நாயக்கருக்கும், டச்சு காரர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் பத்து கிராமங்கள்நாகையுடன் இணைக்கப்பட்டது, போர்த்துகீசியர்களிடமிருந்து டச்சுக்கு மாற்றப்பட்டன.

News March 1, 2025

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் 78 000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26-க்குள் இருக்கும் தகுதியானவர்கள் <>{ioci.com}<<>> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

News March 1, 2025

ரூ.5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

image

நாகையில் கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக நகர போலீசாருக்கும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் வந்ததை அடுத்து போலீசார் அக்கரைப்பேட்டை சால்ட்ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் அங்குள்ள கல்லறைகளில் சோதனை நடத்தியபோது ரூ.5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து இதில் சம்மந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News February 28, 2025

பீச் வாலிபால் போட்டிக்கான தேதி மாற்றம்

image

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டு விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும். இதுகுறித்த மேல் விவரங்களுக்கு 93424 99 783 மற்றும் 9629 370402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நற்செய்தி

image

நாகை மாவட்டத்தில் 2024யில்  ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக 33 மற்றும் 33% மேல் பாதிக்கப்பட்ட 3340.4560 ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றிற்கு இடுபொருள் நிவாரணமாக ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் ரூ.17,000/-வீதம் 5728 விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5,68,29,838/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை விவசாயிகளின் வங்கி கணக்கில் ஒரு வரவைக்கப்படும் ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல்

News February 27, 2025

மயானக்கொள்ளையில் இரவு என்ன நடக்கும்?

image

ஆட்டு ஈரல், எலும்பு துண்டுகளை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார்.
முருங்கைக்காய், மஞ்சள், கொழுக்கட்டையை வான்நோக்கி வீசுவார்கள். காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டு ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர். அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்பப்படுகிறது.

News February 26, 2025

நாகையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை(பிப்.27) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!