India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டம் இன்று கீழையூர் கிழக்கு ஒன்றியம் திருப்பூண்டியில் பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களிடம் இந்தியா கூட்டனி வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்கு சேகரித்தார். உடன் கீழையூர் திமுக கழக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். திருப்பூண்டி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகா, வேளாங்கண்ணி அடுத்த பரவை காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எதிரே வந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வை.செல்வராசு மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தெற்கு பொய்கைநல்லூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பணிக்குழு செயலாளர் பால்ராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவை தலைவர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வீடுவீடாக சென்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகூர் பெருமாள் கீழவீதி கட்சி அலுவலகத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர திமுக செயலாளர் எம்.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு வெற்றிக்கு தீவிரமாக பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 26, வேட்பு மனுக்களில் 9, வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ் ,அதிமுகவின் சுர்ஜித் சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
நாகை மக்களவை தேர்தலில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகை சட்டப்பேரவை தொகுதியில் 220 வாக்குசாவடி மையங்களுக்கு 1240 அலுவலர்கள், கீழ்வேளூர் தொகுதியில் 203 வாக்குசாவடி மையங்களுக்கு 877 வாக்குசாவடி அலுவலர்கள், வேதாரண்யம் தொகுதியில் 227 வாக்கு சாவடி மையங்களுக்கு 1077 வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
ராராந்திமங்கலத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு கோலப்போட்டி (ம) மெஹந்தி போட்டி யை திட்ட இயக்குனர் முருகேசன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வட்டார இயக்க மேலாளர் அறிவு நிதி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகை நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமான உடல்நிலையில் உள்ள அனைத்து முன்னால் படைவீரர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04365299765 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வெயில் படிபடியாக உயர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா . பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் கோ. அரங்கநாதன் ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.