Nagapattinam

News April 26, 2025

நாகை மக்களே ராகு – கேது பெயர்ச்சிக்கு இங்க போங்க!

image

நாகப்பட்டினம் மாவட்டம்,நாகூரில் உள்ள நாகூர் நாகநாத சாமி கோயிலில் அருள்மிகு நாகநாத சுவாமியும், நாகவல்லித் தாயாரும், ராகு பகவான் உள்ளனர் 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 26, 2025

தாய் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு இரட்டை ஆயுள்

image

காரைக்கால்மேடை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பரவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய் மகள் இருவரை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News April 26, 2025

நாகை டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே.1ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக், மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற மதுப்பானக்கூடங்கள், அரசு உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மே.1 அன்று யாரும் மது விற்பனை செய்யக்கூடாது, அதையும் மீறி மது விற்பனை செய்யப்பட்டால் மது விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 25, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்.25 ஆம் தேதியான இன்றே கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 25, 2025

ராகு கேது தோஷம் நீக்கும் நாகநாதசுவாமி கோயில்

image

நாகைக்கு அருகில் மயிலாடுதுறை, கீழப்பெரும்பள்ளத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. நாளை ஏப்.26 மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தியாம். SHARE IT.

News April 25, 2025

பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News April 25, 2025

நாகப்பட்டிணம்: டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 காலி எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுத படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3 க்குள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 25, 2025

நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்.

image

நேற்று முன்தினம் நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளாங்கண்ணி செல்லும் ECR சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு கார் ஒன்றில் சோதனை செய்தபோது, காரில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதில் கவிவர் மன்(வயது 26), விக் னேஷ்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

News April 25, 2025

நாகை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தொழிலாளர் தினம் வருகின்ற மே.1ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து வகை அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும். இதனை மீறி அன்றைய தினம் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்

News April 24, 2025

இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

image

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!