Nagapattinam

News April 18, 2024

ஆட்சியர் ஆணையை அமல்படுத்தும் வணிகர்கள்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் ஆணைப்படி நாளை தேர்தல் நாளன்று வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது என்றும் நாமும் நம்மிடம் பணிபுரியும் ஊழியர்களும் ஜனநாயக கடமையை ஆற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்றும் நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

image

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வருகின்ற 21 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. நாகை மாவட்டத்தை சேர்ந்த 2005 செப்டம்பர் 1 ஆம்ட தேதிக்கு பின் பிறந்தவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜூலியஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

image

கீழக்காவலாக்குடியைச் சேர்ந்தவர் அருண்குமார்(26), கூலி தொழிலாளி. நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தேவூர் கடைத்தெருவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தேவூர் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது கீழத்தெருவை சேர்ந்த மூவேந்தன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலே பலியானார்.

News April 18, 2024

திருமருகலில் குளத்தில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

image

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி ஹாஜரா பேகம் தெருவை சேர்ந்தவர் பாவாஷா ஜலாலுதீன் (58). கட்டிட கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஏனங்குடி சத்திரம் குளத்தில் ஓரமாக உள்ள கட்டையில் அமர்ந்துள்ளார். திடீரென மயக்கம் ஏற்பட்டு குளத்தின் உள் தவறி விழுந்துள்ளார். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஜலாலுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருகண்ணபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 17, 2024

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

image

நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 17, 2024

இந்தியா கூட்டணிக்கு, சிவசேனா கட்சி ஆதரவு

image

நாகப்பட்டினம், நாயுடு அரங்கத்தில் இன்று, சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுந்தர் வடிவேலன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அதில் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு சுமைகளை மக்கள் மீது சுமத்தி இருக்கும் பாஜகவை எதிர்த்தும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறி இந்திய கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

News April 17, 2024

நாகை: உடனே வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபட கூடாது என்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அனைவரும் நாகை மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவிட்டுள்ளார்

News April 17, 2024

நாகை: 5 நாட்கள் டாஸ்மாக் அடைப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியிருக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினமும், மே. 1 தேதியும் மதுபான கடைகளை மூடியிருக்க வேண்டும். இந்த நாட்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

மூன்று மதத்தினரும் பாஜகவிற்கு ஆதரவு: நாகை வேட்பாளர் பேச்சு

image

கீழ்வேளூர் பாஜக ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமையில், நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஜி.எம் ரமேஷ் நேற்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்வேளூர் அடுத்த செருநல்லூர், குருமனாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், “ இந்து மட்டுமின்றி இஸ்லாமியர், கிருஸ்தவர் மக்களிடையே பாஜகவிற்கு மிகுந்த வரவேற்பும் ஆதரவும் உள்ளது” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

News April 16, 2024

தேர்தல் செலவினம் குறித்த ஆய்வு கூட்டம்

image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நாகை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ரிஷிகேஷ் ஹேமந்த் பட்கி தலைமை தாங்கினார்
திருவாரூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் வருண் சோனி முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத்தின் அனைத்து தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!