India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை, வேளாங்கண்ணி அருகே சீராவட்டம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. வேளாங்கண்ணியில் ஆன்மிக்ச் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பிய போது வயலில் கவிழ்ந்ததில் 17 பேர் காயம் அடைந்தனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், இவ்விபத்து குறித்து விசாரனை செய்து வருகின்றனர். இந்தவிபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை நாகை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை சிவகங்கை என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை மே 13 முதல் துவங்குவதாக அறிவிப்பு வெளியாகி அதன் பின்னர் 2 முறை தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மே 19ஆம் தேதி கப்பல் சேவை இயங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் மறுதேதி அறிவிக்கப்படாமல் கப்பல் போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்திய கடல் எல்லை பரப்பில் மீன்பிடித்த இலங்கை பருத்தித் துறை பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் அருகே இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது இந்திய எல்லைக்குள்
ஐந்து படகு மூலம் கடல் அட்டைகளைப் பிடித்த இலங்கை மீனவர்களை கண்டு அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு ஜூன் 7ஆம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேபி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஒரு மாதமாக பாமாயில் விற்பது இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளி சந்தையில் அதிக விலை கொடுத்து பாமாயில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாமாயில் விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் வரும் 25 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் ஜூன் 10 ஆம் தேதி மீன்வளத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளன. எனவே படகு உரிமையாளர்கள் படகின் பதிவுச் சான்று, மின்பிடி உரிமம் உள்ளிட்டவைகளை ஆய்வு குழுவினரிடம் காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) பேபி நேற்று(மே 15) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.