India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேதாரண்யம் அருகே உள்ள தென்னடார் ஊராட்சியில் நேற்று இரவு பாண்டியன் என்பவரது
வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வாய்மேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் பி. பனங்குடி, எம். பனங்குடி, வெட்டி வாழ்க்கை ,காரை மேடு, ஏரிமேடு , சேவாபாரதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள மொத்த வாக்காளர்கள் 1441 பேரில் நேற்று 708 பேர் வாக்களிக்க செல்லாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
இங்குள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சி.பி.சி.எல் விவசாய நிலங்களை சீரழிப்பதாக கூறி இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் நேற்று காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவு தொடங்கியது. நாகை வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒரு சில வாக்காளரின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி, செல்லூர் பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பிற்பகல் 3 மணி வரை உள்ள நிலவரப்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில் 54.07% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் காமாட்சி அம்மாள். இவர் இன்று தனது 101 வயதிலும் காலையிலேயே வாழ்மங்கலம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அப்போது அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் தங்க . வரதராஜன் காமாட்சி அம்மாளிடம் ஆசி பெற்றார்
நாகை, கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வாக்காளர்களை கவர அசத்தல் ஏற்பாடுகளை செய்து, பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வாக்குச்சாவடியா அல்லது திருமண மண்டபமா என வியக்கும் வகையில் அலங்கார வளைவுகளுடன் சீனி, சந்தனம் வழங்கி வாக்காளர்களை வரவேற்க சிறப்பு ஊழியர்களை அமர்த்தி இருந்தது வாக்காளர்களை கவர்ந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் வாக்களித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி காமேஸ்வரம் வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி நாகப்பட்டினம் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
நாகை டாட்டாநகர் வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானதால் மீனவர்கள் வாக்களிக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வாக்கு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வாக்கு சாவடியில் பதட்டமான சூழலில் நிலவி வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்த இலகுவாக இலவசமாக அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவையினை “Saksham App” உதவி எண் 1950 கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் மூலமாக தொடர்பு கொண்டு நாகையில் நூறு சதவீத வாக்கு பெற வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Sorry, no posts matched your criteria.