India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை அடுத்த வாய்மேடு உடைய அய்யனார் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்குவளை அடுத்த வலிவலத்தில் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சோமஸ்கந்தர் அம்பாளுடன் தேரில் எழுந்தருள சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், நாகை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான பகுதிகள் நீரின்றி வறண்ட பாலைவனம் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கால்நடை வளர்ப்போருக்கு கோடைகால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர் மயிலாடுதுறை காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருமருகல், இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகராஜ் (38). இவா், 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த விளைநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திருமருகல் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.
கீழ்வேளூர் வட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரத்தில் நேற்று பரமேஸ்வரி என்பவரின் கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் சேதமடைந்த வீட்டினை இன்று மாலை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு கந்தூரி உள்ளிட்ட விழா காலங்கள் மட்டுமின்றி தினந்தோறும் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரிகர்கள் வந்து செல்கின்றனர்.
இப்படி சிறப்பு வாய்ந்த நாகூர் ஆண்டவர்கள் தர்காவின் நுழைவாயிலின் மேல் அமைந்துள்ள கடிகாரம் நீண்ட நாட்களாக ஓடாமல் நின்ற வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கடிகாரத்தை ஒட செய்வார்களா என யாத்ரிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் திருவிழாவான நேற்று இரவு ஓலைச் சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகன சககோபுர காட்சி மின்விளக்கு அலங்காரத்தோடு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. மாவட்டத் தேர்தல் பார்வையாளர் பாரதி லக்பதி நாயக், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான நாகை ஜானிடாம் வர்கீஸ், திருவாரூர் சாரு ஶ்ரீ மற்றும் வாக்காளர்கள் முன்னிலையில் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட காருக்குடி பகுதியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே கனக வாகனங்கள் செல்லும் வகையில் பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளிக்கப்பட்ட வந்தது. குறிப்பாக நான்கு தலைமுறைக்கு மேலாக இங்குள்ள ஒத்தையடி பாதை அளவிலான பாலத்தை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது, புதிய பாலம் எம்எல்ஏ பொது நிதியிலிருந்து பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.