India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மக்களவைத் தொகுதிக்குஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் செல்லூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள், வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
சிக்கல் சிங்காரவேலன் கோவில் என்றழைக்கப்படும் நவநீதீஸ்வரர் கோவில் சிக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் சிவனும் விஷ்னுவும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் தொன்மையான கோவில்களில் இதுவும் ஒன்று. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் தமிழ் கட்டடக்கலையில் வடிவமைக்கப்படுள்ளது. மூலவர், 12 கைகளைக் கொண்டு ஆறுமுக வடிவில் காட்சிதருகிறார். இங்கு சரவணப் பொய்கை குளமும் உள்ளது.
நாகை பகுதியில் பிஸ்கெட் வேபர் பிஸ்கெட் , ஐஸ் கிரீம் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அந்த உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜன் கலந்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <
நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்
மே 1ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்டவர்கள், ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று, பயிற்சி முகாமில் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜூலியஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களை மே மாதம் 4 வது வாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களை தயார் செய்து ஆய்வு நாளன்று ஆய்வுக்கு உட்படுத்தி உரிய சான்று பெற்று இயக்க வேண்டும் என நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருக்குவளை அருகே வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் சித்திரை பெருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நேற்று நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு மூலவரான மனத்துணை நாதர் மற்றும் மாழையொண்கண்ணி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மணல்மேடை சேர்ந்த சண்முகம் மனைவி ஜானகி (70) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என ஜானகியின் 2வது மகன் பாரதிதாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரின் முதல் மகன் பாரிராஜன் தான் தாயை அடித்து கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த ரோகிஸ்வரன் இவர் வேட்டைக்காரன்இருப்பு கிராமத்தில் உள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்சில் உரிமம் பெற்று இணையதள சேவை வழங்கி வருகிறார். இந்த நிலையில், நாலு வேதபதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தொழில் போட்டி காரணமாக ஆப்டிகல் இணையதள ஒயரை துண்டித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் ரோகிஸ்வரன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் நாகை மாவட்டத்தை பொருத்தவரை பலர் அதனை காற்றில் பறக்க விட்டு தலைக்கவசம் அணியாமல் சென்று வருகின்றனர். தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என டிஎஸ்பி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.