Nagapattinam

News July 7, 2025

கீழ்வேளூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

image

கீழ்வேளூரில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் அதனை பெற விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமில் வழங்கப்பட உள்ளது. முகாம் (15.07.2025) முதல் துவங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தேவையான ஆவனங்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விண்ணப்பதாரர் பெயரில் மட்டும் உள்ள வங்கி கணக்கு புத்தகம், ஆதார் இணைப்பு உள்ள செல்போன் எண் ஆகியவையுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

News July 7, 2025

நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 68 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! (<<16974210>>பாகம்-2<<>>)

News July 7, 2025

நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (2/2)

image

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க! (<<16974190>>பாகம் 1)<<>>

News July 7, 2025

கார் மோதியதில் கணவன் மனைவி மகள் பலி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நீர்முளை பிரதான சாலையில் கார் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு இரு சக்கர வாகனத்தில் மருதம்பட்டினத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் தனது மனைவி பெரியநாயகி 7 வயது மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 7, 2025

கோடியக்கரை சரணாலயத்தின் சிறப்பம்சங்கள்!

image

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பசுமை மாறாக்காட்டில் புள்ளிமான், வெளிமான், நரி, பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த காட்டில் 154 மூலிகை உள்ளிட்ட 271 வகையான தாவர வகைகள் உள்ளன. ராமாயணத்தில் இங்கு நின்று ராமர் இலங்கையை பார்த்த இடம், ராமர் பாத நினைவிடமாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

நாகையில் ஹவுஸ் வயரிங் இலவச பயிற்சி

image

நாகை புதிய கடற்கரை சாலை பகுதியில் உள்ள மத்திய அரசின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவசமாக ஹவுஸ் வயரிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்!

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள்.
▶வேதாரண்யம்-04369-250457,
▶திருக்குவளை-04365-245450,
▶கீழ்வேளூர்-04366-275493,
▶நாகப்பட்டினம்-04365-242456.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.!

News July 6, 2025

நாகை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்!

News July 6, 2025

நாகை: விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்?

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

நாகை: வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

image

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.48,480 -.85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!