India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் நேற்று வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நாகையில் செயல்பட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கம்போல் அதே இடத்திலேயும் செயல்பட வலியுறுத்தியும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை அருகாமையில் நடந்த ஆர்பாட்டத்தில் வெளிப்பாளையம் வர்த்தக சங்கம், மீனவர்கள், அரசியல் கட்சியினர் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜோஜப்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அஞ்சலகங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவைகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் புதியதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகளை பயன்படுத்தி கொண்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாகை அரசு மருத்துவமனை 11 கிலோ மீட்டர் தூரமுள்ள ஒரத்தூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் நோயாளிகள் பொதுமக்கள் நலன் கருதி நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரத்தூருக்கு காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை 32 நடை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஒரத்தூரில் இருந்து நாகைக்கு காலை 6.15 மணி முதல் இரவு 9.50 மணி வரை 27 நடை பஸ் இயக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பேபி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தை பொருத்தவரை அனல் காற்றோடு வீசிய கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் சூட்டை தணிப்பதற்காக பொதுமக்கள் இளநீர் நுங்கு உள்ளிட்டவற்றை அதிக அளவில் பருக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாகை மாவட்டத்தில் போதிய அளவில் இளநீர் இல்லாததால் காரணத்தால் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதன் வரத்து குறைவு காரணமாக இளநீர் ஒன்று ரூ 30-45 வரை விற்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான
திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்.25 ஆம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. அதன்படி
5ஆம் நாளான நேற்றிரவு ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளால் வேதாரண்யம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் பாபநாசம் வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைபூண்டி வழியாக தலைஞாயிறு வேதாரண்யம் பகுதிக்கு வருகிறது. இந்த வழித்தடங்களில் குடிநீர் முறைகேடாக பல ஊர்களில் எடுக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க ஒ.எஸ்.மணியன் கேட்டு கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் நான்கு மீனவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கடலில் வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் முருகனை கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மீனவர்கள் கரை திரும்பியவுடன் அரசு மருத்துவ கல்லூரியில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் செல்லூர் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயுதம் ஏந்திய மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார், தமிழ்நாடு மாநில போலீசார் என அடுத்தடுத்து 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.