India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மக்களவை தேர்தலில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகை சட்டப்பேரவை தொகுதியில் 220 வாக்குசாவடி மையங்களுக்கு 1240 அலுவலர்கள், கீழ்வேளூர் தொகுதியில் 203 வாக்குசாவடி மையங்களுக்கு 877 வாக்குசாவடி அலுவலர்கள், வேதாரண்யம் தொகுதியில் 227 வாக்கு சாவடி மையங்களுக்கு 1077 வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
ராராந்திமங்கலத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு கோலப்போட்டி (ம) மெஹந்தி போட்டி யை திட்ட இயக்குனர் முருகேசன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வட்டார இயக்க மேலாளர் அறிவு நிதி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகை நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமான உடல்நிலையில் உள்ள அனைத்து முன்னால் படைவீரர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04365299765 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வெயில் படிபடியாக உயர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா . பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் கோ. அரங்கநாதன் ஆகியோர் உள்ளனர்.
நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 2 நபருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையின் தலா ரூ.5,500 அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் மூலம் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் வானவன்மாகதேவியில் இன்று காலை 11 மணியளவில் திடீரென வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இது என்னவென்று தெரியாமல் அலறி ஊர்மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாகை மாவட்டத்தில் 100 % வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு செலுத்துதலை முன்னெடுத்தும் ” என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. 100 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
நாகை மக்களவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளராக கார்த்திகா அறிவிக்கப்பட்டு பல நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்சிடம் வழங்கினார். இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், அகஸ்டின், அற்புதராஜ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நாகை பேருந்து வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மற்றும் போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் ஆகியோர் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.