India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கண்பார்வை இழப்பை தடுப்பதற்காக ஜுலை மாதம் முழுவதும் வைட்டமின் யு திரவம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் யு திரவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 55 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் இன்று தெரிவித்துள்ளார்,
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்க அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்ச வைப்பு தொகை ஏதுமில்லாமல் மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்கி பயன் அடையலாம். இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
நாகை மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க ரூ.1.57 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கோழி வளா்க்கும் திறன் கொண்ட பயனாளிகளுக்கு பண்ணை நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி ஜூலை 10க்குள் விண்ணப்பிக்காலம் என தெரிவித்துள்ளாா்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளித்து கடன் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளித்து கடன் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்கு மானியம் வழங்க உள்ளதால் எஸ்சி, எஸ்டி இனத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அனுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று அறிவித்துள்ளார்
நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் 02.07.24 அன்று கலைஞரின் கனவு இல்லத் திட்ட சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகள் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது நீக்க பயனாளிகளை தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே, இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்குபெற வேண்டுமென இன்று நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வா்கீஸ் நேற்று தெரிவித்துள்ளார். தகவலுக்கு 04365 – 251562 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த திருப்புகலூரில் வாஸ்து தலமான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இன்று சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூரில் நடந்த படப்பிடிப்புக்காக வந்த சசிகுமார், அக்னீஸ்வரரை தரிசிக்க வந்தது தெரியவந்தது. கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சசிகுமாரை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர் .
Sorry, no posts matched your criteria.