India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை அடுத்த காமேஸ்வரம் புனித செபாஸ்தியர் தொடக்கப் பள்ளியில் நேற்று மதியம் நடைபெற்ற விழாவில் 888 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் கையடக்க கணினியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தாட்கோ மற்றும் தலைவர் மதிவாணன் உடனிருந்தனர்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
நாகப்பட்டினம் அடுத்த திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை அருகில் இருந்த உள்ள ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான கோவில் நிலத்தை உதவி ஆணையர் ராணி மற்றும் தனி தாசில்தார் அமுதா தலைமையில் போலீசார் மீட்டனர். மேலும் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று பதாகை வைத்து, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை,குடும்ப அட்டை,வேலைவாய்ப்பு,கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 317 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
நாகை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நாகையில் பிறந்த தமிழ் புலவர் மறைமலை அடிகளாரின் சிலை மேம்பால விரிவாக்க பணிகள் காரணமாக அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதே சிலையை நாகை தம்பிதுரை பூங்காவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன் இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் மறைமலை அடிகளாரின் புகழை போற்றி உரையாற்றினர்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு புனித செபஸ்தியார் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ஆகியோர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர்.
தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், குமரி, தருமபுரி, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நாளை துவங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி கிழக்கு கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இந்த திட்டத்தினை ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் காலை 8 மணிக்கு துவங்கி வைக்கிறார். இதேபோல மாவட்டம் முழுவதும் இந்த திட்டம் நாளை தொடங்குகிறது.
நாகை நடராஜன் மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பின்னர் அவர்களிடம் பேசியது: மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே தங்களுடைய இலக்கு என்ன? என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் கடினமாக உழைத்ததால் ஐ.பி.எஸ். ஆனேன். பொது அறிவு, நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.