India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தொழில் முதலீட்டு நிறுவனங்களாக மாற்றும் திட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரண்டு டிராக்டர்களை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு சங்க செயலாளரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகை அன்னை சத்யா காப்பகத்தில் இருந்த 8 சிறுமிகளை காணாததால், புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன 8 சிறுமிகளும் இன்று சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறுமிகளிடம் விசாரித்த போது, காப்பக வார்டன் தங்களை தொடர்ந்து திட்டியதால் காப்பகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்தனர். இன்று மாலை சிறுமிகள் அனைவரும் நாகைக்கு மீண்டும் அழைத்து வரப்பட உள்ளனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த புதிய கடற்கரை சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து மாவட்ட கிராமப்புற ஆண்களுக்கு சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்கத்திற்கான இலவச பயிற்சியினை வரும் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பயன்பெற 18-45 வயது வரம்பிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் முன்பதிவு செய்ய 6374005365 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. SHARE IT NOW!
நாகை அருகே சாமந்தப்பேட்டையில் இயங்கி வரும் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் 8 சிறுமிகளை காணவில்லை என காப்பக நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து காப்பகம் திரும்ப வேண்டிய சிறுமிகள் இதுவரை வராததால், புகாரின் பேரில் நாகை எஸ்.பி ஹர்ஷிங், டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் ஆகியோர் காப்பக ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை அருகே வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (41). இவர் நேற்று (அக்.1) இரவு வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில் கடை வாசலிலேயே மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகையை அடுத்த ஐவநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக இந்து அறநிலையத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நிலத்தை மீட்ட அதிகாரிகள், அதன் சந்தை மதிப்பு ரூ.4.50 கோடி வரை இருக்கும் எனத் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாணிகோட்டகம் மற்றும் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்களை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் நாளை (02.08.2024) மதியம் 12.00 மணியளவில் வழங்க உள்ளார் என ஆட்சியர் ஆகாஷ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் நாகூர் நஜிமுதீன் தையல் இயந்திரங்களை இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை விமர்சனம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாகூரை கண்டித்து நாகையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் அனுராக் தாகூரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நாகை அரசு மருத்துவமனை பின்புறம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவு சார் மைய கட்டிடம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு நாள்தோறும் ஏராளமான மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பெரியோர்கள் உள்ளிட்ட பலரும் நூல்களைப் படித்து பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆட்சியர் ஆகாஷ் அறிவுசார் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.