India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துணி ரகங்களை வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து துறை பணியாளர்களும் கைத்தறிக்கு கைகோர்த்து உதவிட வேண்டுமென ஆட்சியர் மகாபாரதி அப்போது கேட்டுக் கொண்டார்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனை அடுத்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்களை நேற்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விசாரணை அமைப்புகளை கூலிப்படைகளாக வைத்து எதிர்க்கட்சிகளை முடக்கும் பாஜக அரசுக்கு மீண்டும் சம்மட்டி அடி உச்ச நீதிமன்றம் கொடுத்து இருக்கிறது என அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் அதன் விவரங்களை பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் மாவட்ட நூலக அலுவலகம், பொது அலுவலக சாலை, வெளிப்பாளையம், நாகப்பட்டினம் 611001, எண் 9150658877 என்ற முகவரிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த நூலகத்திற்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி நாளை காலை 10.30 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள அதிபர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் நேற்று கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமை இருப்பதால் பரஸ்பர மரியாதையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்துக்களை COMMENTஇல் பதிவிடவும்.
மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், பழனி வழியாக பாலக்காட்டுக்கு தினசரி ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் குறைவான ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மயிலாடுதுறை ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவ சிலையின் திறப்பு விழா நாளை செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும் , விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருஉருவ சிலையை திறந்து வைத்து கொடியேற்றி சிறப்புரையாற்ற உள்ளார். இதில் திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்கும்படி இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை குறித்து செப். 20 முதல் 3 நாள்கள் போலீஸாா் தொடா் தேடுதல் வேட்டை நடத்தினா். இதில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமாா், ஜீவா, முகமது ரியாத், அசாருதின், அ. சிலம்பரசன், இ. சிலம்பரசன், ரெனிஜியாஸ், தினேஷ்குமாா், விக்னேஷ், முகமது அப்பாஸ், பிரதீஷ், கோபால் ஆகிய 12 பேரை கைது செய்து, 690 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 16ஆம் தேதியும் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9500272309 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் இணைய சேவையில் வரும் கஸ்டமர் கேர் எண்னை தொடர்பு கொள்ளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் OTP எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும், இணைய வழி குற்றங்கள் குறித்த இலவச சேவை எண் 1930ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.