Mayiladuthurai

News October 10, 2024

மயிலாடுதுறையில் ரேஷன் கடையில் பணிபுரிய வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 45 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbmyt.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News October 9, 2024

மயிலாடுதுறை தமிழ் அறிஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார். மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்கின்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News October 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்கு அக்டோபர் 10ஆம் தேதி அன்றும் , சீர்காழி வருவாய் கோட்டத்திற்கு அக்டோபர் 25ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 9, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, புயல், வெள்ளம், இடி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் TN-ALERT என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார். பேரிடர் தொடர்பான புகார்களையும் இதில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

News October 9, 2024

மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

image

மயிலாடுதுறையில் இருந்து தினசரி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், திருச்சி செல்லும் ரயில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் இரவு 7.10 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சிக்கு இரவு 10.30 மணிக்கு இந்த ரயில் சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 8, 2024

மயிலாடுதுறையில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முறையீடுகளை 18002021989 என்ற தொலைபேசி எண் அல்லது 14566 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் அலுவலக நாட்களில் புகார் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News October 8, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் நியமனம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சி.வெ. மெய்யநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 309 மனுக்கள் பெறப்பட்டது

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
309 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கடன் கேட்டு விண்ணப்பம், விதவை உதவித்தொகை போன்ற மனுக்கள் தரப்பட்டன இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.

News October 6, 2024

கோமல் ரயில்வே கேட் மூடல்

image

மயிலாடுதுறை குத்தாலம் இடையே ரயில்வே லைனில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை முன்னிட்டு தேரழுந்தூர் அருகே கோமல் ரோடு ரயில்வே கேட் நாளை காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மாற்று வழியில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 6, 2024

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு நிதி ஆண்டில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50.29 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் http//www/tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!