Mayiladuthurai

News October 14, 2024

அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அதிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நாளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

News October 14, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 94426-26792 மற்றும் மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மயிலாடுதுறை – 04364-252218 , 9498482319 , சீர்காழி – 04364-279301 , 9445854006 மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாடு அறை தொலைபேசி எண் மயிலாடுதுறை -04364-222277 , 8668171501 மற்றும் சீர்காழி – 04364-276336 , 9842382883 புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.

News October 14, 2024

மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டு மழை , புயல், வெள்ளம் , இடி , மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் – 04364-1077 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி. மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

மயிலாடுதுறைக்கு அதி கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) கனமழை எச்சரிக்கையும், அக்.16-ஆம் தேதி அதி கனமழை எச்சரிக்கையும் (ரெட் அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்

image

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த 37 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 37 மீனவர்கள் இன்று மாலை இலங்கையிலிருந்து இந்திய தூதரகம் வழிகாட்டுதலின்படி விமானம் மூலம் சென்னை வர உள்ளார்கள். பூம்புகாரில் இருந்து 2 வேன்கள், 1 காரில் கிராம நிர்வாகிகள் சென்னை சென்று அழைத்து வரவுள்ளனர்.

News October 14, 2024

மயிலாடுதுறையில் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த 3 மணி நேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share it.

News October 13, 2024

மயிலாடுதுறையில் மணமக்களுக்கு ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்து

image

மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அமீன் அவர்களின் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

News October 13, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான கணினி வகையிலான தேர்வானது மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இத்தேர்வு 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தேர்வினை 915 பேர் எழுத்தவுள்ளனர். தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வராதவர்கள் தேர்வெழுத அனுமதிக்க மாட்டார்கள் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 13, 2024

மயிலாடுதுறையில் வாசகர்களை கவர்ந்துள்ள புத்தக கண்காட்சி

image

மயிலாடுதுறை மகாதான தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் சிறுகதைகள், வரலாறு, ஜோதிடம், சமையல் குறிப்புகள், வாழ்க்கை வரலாறு, பிரபல நாவல்கள், ஆசிரியர்களின் வரலாறு, கவிதை தொகுப்புகள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

News October 12, 2024

தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு வாழ்த்து

image

மயிலாடுதுறை மாவட்டம், ஆர்எச்வி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷனை சேர்ந்த மாணவி வைதேகி குத்துச்சண்டை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் தடகளப் போட்டியில் அபிநயா என்ற மாணவி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பலரும் இன்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!