India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர், புதுவை – காரைக்காலுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து தினசரி காலை 8.05 மணிக்கு கும்பகோணம் , தஞ்சாவூர் மார்க்கமாக திருச்சி செல்லக்கூடிய ரயில் நவம்பர் 26 ஆம் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இடையில் ரயில் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரயில் மீண்டும் இயங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு துவங்கி மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று(26.11.2024) மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். ஷேர் செய்யவும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டாரத்திலும் சுகாதார தேவைகளை ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் மூன்று நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனைத்து விதமான தடுப்பூசிகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பருவகால ஆய்வுகள் செய்யப்பட்டு பழுதான மின்கம்பங்களில் 314 மாற்றப்பட்டுள்ளன. மேலும் மின் பாதையில் இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் கிளைகள் 2219 அகற்றப்பட்டுள்ளது. 5600 மின்கம்பங்கள் இருப்பு உள்ளது. தொடர்ந்து 44 மின்மாற்றிகள் பயன்படுத்திட இருப்பு உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மீன்வளத்துறை சார்பில் 28 கடலோர மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளடக்கிய வாட்சப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.வெள்ள பெருக்கின்போது பொது மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில்தங்க வைக்க 73 Rescue உருகளும் 80 தன்னார்வ நீச்சல் நன்கு தெரிந்த நபர்களும் செல்பேசி எண்களுடன் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை மையம் 26.11.2024 முதல் 28.11.2024 வரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் மழை சேதம் தொடர்பான மயிலாடுதுறை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.26) மற்றும் நாளை மறுநாள் (நவ.27) அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உட்பட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.