Mayiladuthurai

News October 23, 2024

தொழில் முனைவோர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டை குளிச்சார் கிராமத்தில் அமைந்துள்ளது. தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில் மனைகள் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தொடர்ந்து புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை

image

மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது மாணவர்கள் நல்ல முறையில் கல்வியை கற்க வேண்டும் எனவும். தேவையில்லாத போதை பழக்கத்தில் ஈடுபடாமல் கல்வி ஒன்றே இன்றியமையாதது என்பதை உணர்ந்து கற்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் கற்பிக்கும் வகுப்பு பாடங்களை அன்றே உணர்ந்து கற்க வேண்டும் என தெரிவித்தார்.

News October 22, 2024

கொள்ளிடம் அருகே இளைஞர் கைது

image

புதுப்பட்டினம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ் (23) என்பவரின் வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கனகராஜை கைது செய்தனர். மேலும் கனகராஜ் புதுப்பட்டினம் பழையாறு உள்ளிட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

News October 22, 2024

சீர்காழி அருகே போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல்

image

சீர்காழி அருகே போக்குவரத்து எஸ்.ஐ வேல்முருகன் தலைமையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த மங்களதாசன் (35) என்பவரை போக்குவரத்து எஸ்.ஐ செந்தில் சோதனை செய்ய முயன்ற பொது அவரை தாக்கியுள்ளார். அவரை பிடிக்க முயன்ற பெண் போலீஸ் மற்றும் எஸ்.ஐ வேல்முருகனையும் மங்களதாசன் தாக்கியுள்ளார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 22, 2024

கொள்ளிடம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

image

புதுப்பட்டினம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ் (23) என்பவரின் வீட்டில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கனகராஜை கைது செய்தனர் மேலும் கனகராஜ் புதுப்பட்டினம் பழையாறு உள்ளிட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

News October 21, 2024

கொள்ளிடம் அருகே நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

கொள்ளிடம் அருகே திருநீலகண்டம் புதுமண்ணியாற்றில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் படி புதுப்பட்டினம் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கூத்தியம்பேட்டை மூத்தன் தெருவை சேர்ந்த சிரஞ்சீவி என்பதும் கூலி தொழிலாளியான இவருக்கு மது பழக்கம் இருந்ததாகவும் நேற்று முதல் அவரை காணாமல் உறவினர்கள் தேடி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

News October 21, 2024

திருமணங்களை நடத்தி வைத்த ஆட்சியர், எம்எல்ஏ

image

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற உத்வாகநாதர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத் துறையால் 8 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். கோட்டாட்சியர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News October 21, 2024

மயிலாடுதுறையில் பெறப்பட்ட மனுக்களின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொத்தமாக பொதுமக்களிடமிருந்து 218 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News October 21, 2024

சீர்காழியில் போலீசாரை தள்ளிவிட்ட நபர் கைது

image

சீர்காழி புறவழிச்சாலை கோயில்பத்து பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் SSI செந்தில் ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர் அப்போது அகனி பகுதியைச் சேர்ந்த மங்களதாசன் என்பவர் மது போதையில் உள்ளாரா என சோதனை செய்ய முயன்ற போது அவர் எஸ் எஸ் ஐ செந்திலை தள்ளிவிட்டது சோதனை செய்யும் கருவி சேதம் அடைந்தது இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து மங்களதாசனை கைது செய்தனர்

News October 21, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்

image

 குத்தாலம் காவல் துறை சரகத்திற்கு உற்பட்ட ஆணைக்காரன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (27). இவர் அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

error: Content is protected !!