India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து தற்போது வரை 28 கிலோ கிராம் கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மயிலாடுதுறை எம்பி சுதா ஆகியோர் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இத்திரைப்படத்தை அனைவரும் காண வேண்டும் என மயிலாடுதுறை எம்பி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருட்களின் விற்பனை குறித்து 9626169492 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவும் , வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்பி ஜி.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். SHAREIT
திருச்செந்தூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் ரயில் 2 மணி நேரம் காலதாமதமாக 10.25 மணிக்கு நாளை நவம்பர் 5ஆம் தேதி திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக வரும் என கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் மாநில அளவிலான விளையாட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. எனவே மயிலாடுதுறை விளையாட்டு வீரர்கள் இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04364-240050 , 7401703459 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டவுன் இரண்டு மற்றும் கூறைநாடு மின்பாதையில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து திருவாரூர் சாலை, சீனிவாசபுரம், கூறைநாடு, காவேரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பொதுப்பிரிவில் 5.5 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட திருமஞ்சன வீதி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்காலினை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இரண்டாவது நாளாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி சேர்மன் செல்வராஜூ உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக நவம்பர் 3ஆம் தேதி இன்று சென்னை செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தொடர்ந்து இரவு 10.50 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு மயிலாடுதுறை வருகை தந்து நவம்பர் 4ஆம் தேதி காலை 6.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.