Mayiladuthurai

News December 1, 2024

சாலையோரம் உள்ள கதண்டு கூடு- மக்கள் அச்சம்

image

கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி ஆனந்தகூத்தன் கிராமத்திலிருந்து புத்தூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள மரத்தில் கதண்டு கூடு கட்டி உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். உடனடியாக கதண்டு கூட்டை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 30, 2024

மயிலாடுதுறையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃவெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 29, 2024

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவித்து ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 29, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 கீ.மி வேகத்தில் காற்று வீசக்கூடும்

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது மயிலாடுதுறை, கடலூர், நாகை உள்ளிட மாவட்டங்களில் 70-90 கீ.மி வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழைவ வரை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

மயிலாடுதுறை: ஔளையார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை செய்தமைக்கு 2025 ஆம் ஆண்டில் ரூ.1,50,000க்கான காசோலை, சான்றிதழ் சர்வதேச மகளிர் தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் 5-வது தளம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு நேரில் வந்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்

News November 28, 2024

சிறுமி கூட்டு பாலியல் – உண்மைக்கு புறம்பானது எஸ்பி அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், உண்மைக்கு புறம்பானது என்றும் , காவல்துறைக்கு கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின் உண்மைத்தன்மை ஆராய்ந்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இது போன்ற தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் இன்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

News November 28, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தீவிர மழை எச்சரிக்கை

image

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!

News November 28, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ வாபஸ்

image

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக இன்று (நவ.27) முதல் நாளை (நவ.28) காலை 8.30 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!