Mayiladuthurai

News December 16, 2024

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய ஆண் சடலம்

image

கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையிலான ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் தலையில் முடி இல்லாமலும், நீலநிற டீ ஷர்ட்டும் கருப்பு நிறத்திலான கால் சட்டையும் அணிந்திருந்தார்.

News December 16, 2024

இ வி கே எஸ் இளங்கோவன் மறைவு: மயிலாடுதுறை எம்பி அஞ்சலி

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன் இயற்கை எய்தியதையொட்டி இன்று அவரது இல்லத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் சுதா நேரில் சென்று நினைவு அஞ்சலி செலுத்தினார். அப்போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News December 15, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு வேலை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு கணினி இயக்குபவா் (1) பணிக்கு விண்ணப்பிக்கலாம். கணினி சாா்ந்த பணிகளில் 1 ஆண்டு அனுபவம் வேண்டும். 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.<>LINK<<>>

News December 14, 2024

கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்!

image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் நீர்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 14, 2024

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 13ஆம் தேதி மாலை 117.57 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் ஆற்றில் சுமார் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 60,000 கன அடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

கூடுதலாக இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள்

image

கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு பழனி , திண்டுக்கல் , திருச்சி மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரம் செல்லும் ரயிலில் நேற்று முதல் கூடுதலாக நான்கு முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

News December 14, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: ஆய்வு மையம்

image

வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதந்தன. இந்நிலையில் வருகிற டிச.16 (திங்கள்) முதல் டிச.18 (புதன்கிழமை) வரை மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 13, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்பி பங்கேற்பு

image

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நாடாளுமன்றத்தின் வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்‌. சுதா கலந்து கொண்டார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

News December 12, 2024

ரயில்வேத்துறை அமைச்சரை சந்தித்த மயிலாடுதுறை எம்பி.

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா. இவர் நேற்று டெல்லியில் ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சென்று சந்தித்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் இடையே இரட்டைப் பாதை அமைக்க வலியுறுத்தினார்.

error: Content is protected !!