Mayiladuthurai

News December 19, 2024

உணவு தரம் குறித்து கேட்டறிந்த கலெக்டர்

image

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளனவா என அங்கு தங்கியுள்ள மாணவர்களிடம் கேட்டறிந்தார். 

News December 19, 2024

மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் மயிலாடுதுறை இணைந்து நாளை டிசம்பர் 20ஆம் தேதி மயிலாடுதுறை யூனியன் கிளப் கச்சேரி சாலையில் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்.

News December 18, 2024

மயிலாடுதுறை நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், மருத்துவ பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் சுகாதார அலுவலகம், நம்பர் 5, புதுத்தெரு, மஹால் எதிர்புறம், மயிலாடுதுறை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் டிச-30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 18, 2024

டெல்லியில் மயிலாடுதுறை எம்.பி போராட்டம்

image

மயிலாடுதுறை மக்களவை தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினராக பதவி வகித்து வரும் வழக்கறிஞர் சுதா நேற்று (டிச.18) டெல்லி நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு மக்களாவை தொகுதியின் உறுப்பினருமான பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார். 

News December 17, 2024

மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளுக்காக மொத்தம் 300 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News December 17, 2024

ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லக்கூடிய பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பக்கம் இரண்டு பெட்டியும், பின்பக்கம் இரண்டு பெட்டிகளும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

News December 16, 2024

புது டெல்லியில் அரசு பள்ளி மாணவி சாதனை

image

புதுடெல்லியில் டிச.14 மற்றும் டிச.15ஆம் தேதிகளில் நடைபெற்ற இன்டர்நேஷனல் UCMAS அபாகஸ் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த பெருஞ்சேரி அரசு பள்ளியில் பயிலும் மாணவி மகாவர்ஷினி கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News December 16, 2024

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News December 16, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து! (1/2)

image

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட கூடிய மாவட்டங்களில் மயிலாடுதுறை முதலிடத்தில் உள்ளது. அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள், குறையும் நிலத்தடி நீர் மட்டம் உள்ளிட்ட பல காரணங்களால் வரும்காலங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம், வறட்சி, கடும் வெப்பம், அரிசி உற்பத்தி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News December 16, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து! (2/2)

image

இந்த அறிக்கையை கருத்தில் கொண்ட தமிழக அரசு, தமிழகத்திலேயே முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கென பிரத்யேக மாவட்ட காலநிலை செயல்திட்டத்தை (DCAP) தயரித்துள்ளது. அதன்படி 2030-ஆம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தில் சூரிய சக்தி மற்றும் பசுமை சார்ந்த திட்டங்கள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை காக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

error: Content is protected !!