Mayiladuthurai

News December 23, 2024

கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

சீர்காழி முழு நேர கிளை நூலகத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டமாக, திருக்குறள் தொடர்பான கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்கள், திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

News December 22, 2024

தேர்வை வேறு தேதிக்கு மாற்ற அமைச்சருக்கு கடிதம்

image

ஜனவரி14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் யுஜிசி நெட் தேர்வு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, யுஜிசி நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று (டிச.22) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 22, 2024

சீர்காழி முழு நேர கிளை நூலகத்தில் நாளை சிறப்பு நிகழ்ச்சி

image

பொது நூலக இயக்ககம், சீர்காழி முழு நேர கிளை நூலகம் சார்பில் அப்பன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருஉருவச் சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்ட துவக்க விழா நிகழ்ச்சி சீர்காழி நூலகத்தில் நாளை (டிச.23) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி கலந்து கொண்டு, திருவள்ளுவர் திருவுருவப்படம் மற்றும் திருக்குறள் தொடர்பான கண்காட்சி தொடங்கி வைக்க உள்ளார்.

News December 22, 2024

மயிலாடுதுறையில் இன்று இலவச வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 8:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பயோடேட்டா, ஆதார் கார்டு நகல் மற்றும் படிப்பு சான்றிதழ்களை அவசியம் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 22, 2024

அதிமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

image

சீர்காழி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி நாதக ஒன்றிய இளைஞரணி செயலாளர் வினோத்ராஜ் ஏற்பாட்டில், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இதில் கழக அம்மா பேரவை துணை செயலாளர் மார்கோனி, ஒன்றிய கழக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 21, 2024

திருவெண்காடு சிறுமி கொலை வழக்கு: இரட்டை ஆயுள் தண்டனை

image

திருவெண்காடு அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் குற்றவாளி கல்யாணசுந்தரத்திற்கு 2 ஆயுள் தண்டனையும் 4000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.

News December 21, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (டிச.21) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மயிலாடுதுறை, மேக்கிரிமங்கலம், குத்தாலம், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், தரங்கம்பாடி, மங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே செய்தியை ஷேர் செய்யவும்!

News December 20, 2024

 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் பாராட்டி இன்று சான்றிதழ்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றி சான்றிதழ் பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.

News December 20, 2024

மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் ரயில் ரத்து

image

திருச்சியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கு மயிலாடுதுறை வழியாக தாம்பரம் சென்று, மீண்டும் அதே வழியில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் ரயில் (06190-06191) வருகிற டிச.27, 28, 29, 31 ஆகிய 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

News December 20, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.21) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மயிலாடுதுறை, மேக்கிரிமங்கலம், குத்தாலம், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், தரங்கம்பாடி, மங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே செய்தியை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!