India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி தாம்பரமிடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 4, 5, 10 ,11 ,12 ,13 ,17 ,18 ,19 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை விழுப்புரம் வழியாக மதியம் 12:30 க்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து நண்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சீர்காழி அருகே உள்ள பூம்புகார் கடற்கரையில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மணிகண்டன்(40) என்பவர் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி மாயமானார். போலீசார் மற்றும் மீனவர்கள் மணிகண்டனை தேடி வந்த நிலையில் நேற்று வானகிரி மீனவ கிராமத்திற்கு தெற்கே மணிகண்டனின் உடல் கரை ஒதுங்கியது. போலீசார் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோயில், ஆச்சாள்புரம், அரசூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே திருக்கோலக்கா, கோயில்பத்து, கொள்ளிடம், முக்கூட்டு, இரணியன் நகர், விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, மாதானம், அரசாளமங்கலம், உமையாள்பதி, நல்லநாயகபுரம், வேம்படி, திருமுல்லைவாசல், காப்பியக்குடி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஜன. 4) காலை 9 மணி முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படவுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு உட்பட்டவராகவும் (SC/ST- 46 வயது), குடும்பத்தின் அதிகப்பட்ச ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 04364-299790 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவக எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யவும்!
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பொதுமக்களால் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா பொதுமக்களுக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். மேலும் நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும், பொதுக்கழிப்பறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இதில் நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் இணையவழி மோசடி மூலம் களவு போன ரூ.9,39,323 தொகை மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பல்வேறு தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட முழுவதும் 6,712 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 3,547 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 3,603 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோல தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 302 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.42.31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மாநில அளவிலான முதியோர் தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும் ட்ரிபிள் ஜம்பிங் தங்க பதக்கமும் 100 மீட்டர் வெண்கல பதக்கமும் ரிலே வெள்ளி பதக்கமும் ஆகிய நான்கு பதக்கங்களில் வெற்றி பெற்ற நமது வள்ளாலகரம் ஊராட்சியைச் சேர்ந்த குணசேகரன் சாதனை படைத்துள்ளார்.
சீர்காழி அடுத்த எடக்குடி வடபாதி பகுதியை சேர்ந்த சின்னமணி அவர்களின் மனைவி தாமரை செல்வி வயது 30 அவர்கள் இன்று காலை சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த தகவல் கிடைத்த உடன் சம்பவம் இடத்திற்கு சென்று வைத்தீஸ்வரன் கோயில் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு செய்ய சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Sorry, no posts matched your criteria.