Mayiladuthurai

News January 8, 2025

மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் இன்று (ஜன.08) நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News January 8, 2025

அரசு மருத்துவமனையில் தனி இடம் அமைக்க கோரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பிரித்து அகற்றும் பணி தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் கட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் திறந்த நிலையில் நடைபெறுகிறது. இதனிடையே இதற்கென தனி இடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News January 8, 2025

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கி வரும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களின் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அருகிலுள்ள வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News January 8, 2025

மயிலாடுதுறையில் இளைஞர் விபத்தில் பலி

image

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி சார்ந்த சாகித் மற்றும் ரியாம் காரைக்கால் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வந்த போது தமிழ்நாட்டு எல்லை நல்லடை சாலை வளைவில் அதிவேகமாக வந்துள்ளனர் அப்போது சறுக்கி விழுந்த போது பலத்த காயம் அடைந்த ரியாம்மை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அப்போது சிகிச்சை பலனின்றி ரியாம் உயிரிழந்தார்

News January 8, 2025

கொள்ளிடம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

கொள்ளிடம் அடுத்த ஆனைக்காரன் சத்திரம் காவல் சரக்கத்திற்குட்பட்ட நல்லூர் மெயின்ரோட்டில் தர்ம கோட்டம் வாய்க்கால் உள்ளது. வள்ளியம்மை நகரை சேர்ந்த சாந்தலிங்கம்(75) என்பவர் குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கிய போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2025

மயிலாடுதுறை வாக்காளர் பட்டியலுக்கு பெயரை மாற்றிய எம்.பி

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஆர்.சுதா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயரை மயிலாடுதுறை வாக்காளர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார். மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு என்றென்றும் பாடுபடுவேன் என எம்.பி.சுதா கூறியுள்ளார்

News January 7, 2025

மாணவர்களின் சிலம்பாட்டத்தை பார்வையிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.07) நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

News January 7, 2025

போதை ஒழிப்பு பேரணியை தொடங்கி வைத்த கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை ஒழிப்பு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, உதவி ஆணையர் பூர்ணிமா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News January 7, 2025

மயிலாடுதுறை: ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

சட்டசபையில் ஆளுநர் ரவி சட்டசபையை புறக்கணித்ததால், இன்று (ஜன.07) திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் அறிக்கையின்படி, மயிலாடுதுறை தபால் நிலையம் அருகில் திமுக மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் அனைத்து திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

News January 7, 2025

மயிலாடுதுறை: வாகனம் ஓட்டிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

image

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இலகுரக வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேற்று (ஜன.06) ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தினார்.

error: Content is protected !!