Mayiladuthurai

News January 13, 2025

பூம்புகாரில் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள்

image

சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜ கஜேந்திரகுமார் வட்டாட்சியர் அருள் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 13, 2025

மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்போடு திமுக அரசு ரொக்க பணம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகை போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

News January 13, 2025

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நேரில் சென்று ஆய்வு

image

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞான சம்பந்தர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த கட்டுமான பணிகள் குறித்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News January 13, 2025

பொங்கல் கரும்பு விற்பனை அமோகம்

image

தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் திருக்கடையூர் பொறையார் சங்கரன் பந்தல் பெரம்பூர் உட்பட பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை ஒட்டி கடைவீதிகளில் பொங்கல் கரும்பு கட்டு கட்டாக வைக்கப்பட்டு விற்பனை சூடு பிடித்துள்ளது. வாகனங்களிலும் பொங்கல் கரும்பு விற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பொங்கல் கரும்பு வாங்குகின்றனர்.

News January 12, 2025

சீர்காழியில் தலைமை செயலாளர் ஆய்வு

image

சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக் அமுல்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News January 12, 2025

மயிலாடுதுறை: டிஎஸ்பி விழிப்புணர்வு பிரசாரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மாணவர்களிடையே போதைப்பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது, “எந்த நிலையிலும் போதைப் பொருட்கள் அறிவாற்றலை வளர்க்காது. போதைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 9498158885 என்ற எனது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.

News January 11, 2025

மயிலாடுதுறை சீர்காழி வழியாக சிறப்பு ரயில்

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தலைமை ரயில்வே மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மு.செந்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம்-  தாம்பரம் சிறப்பு ரயில் (06104) ஜனவரி 10,12 மற்றும் 17ஆகிய நாட்களில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை சீர்காழி வழியாக மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என கூறினார்.

News January 11, 2025

மயிலாடுதுறையில் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!

News January 11, 2025

Way2Newsல் நிருபராக விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும், நீங்கள் பகுதி நேர வருவாய் ஈட்ட இது ஒரு அறிய வாய்ப்பு, மேலும் விவரங்களுக்கு 9542922022 என்ற இலக்கத்தை

News January 11, 2025

சுகாதார ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

image

மயிலாடுதுறையில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சுகாதார ஆய்வாளராக பணியாற்றும் செந்தில் (57) என்பவர் அரசு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சிக்காக வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!