India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளரும் விடுதலை பத்திரிகை ஆசிரியருமான விடுதலை க.ராஜேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை சார்பில் தந்தை பெரியார் 2024 விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில பல தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் கலைஞர் அரங்கத்தில் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஆர். ஏற்பாட்டில் நக்கம்பாடி, பாளையூர், கொழையூர், ஊராட்சி சேர்ந்த அதிமுக அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாகவே பரவலான மழை காணப்படுகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 6 தினங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க.
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே ஆத்தூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளினை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இன்று காவல்துறை சார்பில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து காவலர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் காவலர்கள் பலர் பங்கேற்று சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 9 பேர் கலந்து கொண்டு, 3 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப் பதக்கம் மற்றும் 8 வெண்கல பதக்கம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் கதிரவன் ஆகியோருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் பாராட்டலாமே, share it
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா மயிலாடுதுறை பொதுமக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நமது இலக்கு மகிழ்வான மயிலாடுதுறை என அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மயிலாடுதுறை பொது மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் வாழ்த்து செய்தியினை அனைவருக்கும் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினி தனது வார்டில் வசிக்கக்கூடிய வயதான மூதாட்டிக்கு மாதாந்திர உரிமைத் தொகையை இன்று வழங்கினார். தொடர்ந்து மாதம்தோறும் தன் சொந்த நிதியில் இருந்து நகர்மன்ற உறுப்பினர் வாரத்தில் உள்ள முதியவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கி வருவது அனைத்து தரப்பிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மார்கழி கடைசி நாளான இன்று போகிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் கூற்றுக்கு ஏற்ப சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றிணைந்து தங்கள் வீடுகளில் இருந்த தேவையற்ற பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர்.
Sorry, no posts matched your criteria.