Mayiladuthurai

News January 17, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

image

மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை அருமை முதியோர் இல்லத்தில் காசநோய் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்குமார், மயிலாடுதுறை வட்டாட்சியர் திருமதி.விஜயராணி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

News January 17, 2025

மயிலாடுதுறை மார்க்கமாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயிலாக ஜனவரி 19ஆம் தேதியன்று  ராமநாதபுரத்தில் மதியம் புறப்பட்டு அறந்தாங்கி , பட்டுக்கோட்டை , திருத்துறைப்பூண்டி , திருவாரூர் வழியாக மயிலாடுதுறை இரவு 9.34 மணிக்கு வருகை தந்து கடலூர் ,விழுப்புரம் , செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும் புதிய ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணத்தை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 16, 2025

வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு

image

கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஆகியவை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

News January 16, 2025

மயிலாடுதுறை மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்கம்

image

திருச்சியிலிருந்து மயிலாடுதுறை வழியாக காலை 7.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் சென்று மீண்டும் தாம்பரத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் இன்டர்சிட்டி ரயிலானது வருகின்ற ஜனவரி 17 , 18 , 19 ஆகிய நாட்கள் மட்டும் பொங்கல் சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

News January 16, 2025

மயிலாடுதுறையில் இலக்கிய போட்டிகள் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வருகின்ற ஜனவரி-21ம் தேதி செவ்வாய் கிழமை பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணி முதல் போட்டிகள் நடைபெறும். இதில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News January 16, 2025

மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரி மாணவரக்ளுக்கு போட்டிகள் அறிவிப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் வருகிற ஜன.21 & 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சு என மயிலாடுதுறையில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ.7,000, 3-ஆம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 8220021977 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 15, 2025

மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News January 15, 2025

களைகட்ட போகும் திருக்கடையூர் ரேக்ளா பந்தயம்

image

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி காணும் பொங்கல் அன்று புகழ் பெற்ற மாடு குதிரைகளுக்கான ரேக்ளா பந்தயம் நடைபெறும். இந்த ஆண்டும் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்காக ஆயத்த பணிகள் நடைபெற்றது. பந்தல் அமைத்தல். எல்லை கோடுகள் வரைதல். பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

News January 15, 2025

காங்கிரஸ் கமிட்டி அலுவலக திறப்பு விழாவில் எம்.பி பங்கேற்பு

image

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலகத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 15, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன் விலை நிலவரம்.

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் விலை சற்று அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. ஒரு கிலோ சுறா மீன் 35 ரூபாய், ஒரு கிலோ ஜிலேபி மீன் 200 ரூபாய், ஒரு கிலோ சங்கரா மீன் 175 ரூபாய், ஒரு கிலோ வாவல் 600 ரூபாய், ஒரு கிலோ நெத்திலி 150 ரூபாய், ஒரு கிலோ சீலா மீன் 350 ரூபாய் மற்றும் ஒரு இறால் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!