Mayiladuthurai

News January 20, 2025

குத்தாலத்தில் இலவச வீட்டுமனை பட்டா 

image

குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட பயனாளர்களுக்கு சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் எம்.எல்.ஏ   உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News January 20, 2025

மயிலாடுதுறை: 3 மதுபான கூடங்களுக்கு சீல் வைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி இயங்கிய 3 மதுபான கூடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன், 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில், உரிமம் பெறாமல் இயங்கி வரும் மதுபானக்கூடங்களை உடனடியாக மூடாவிட்டால் கைது மற்றும் சீல் நடவடிக்கை தொடரும் என்றும் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 19, 2025

மயிலாடுதுறையில் மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூரைநாடு , அக்கலூர் , தூக்கணாங்குளம் , சாலிய தெரு, அண்ணா வீதி, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

மயிலாடுதுறையில் நடைபெற்ற சோதனை 

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் இன்று சோதனை நடைபெற்றது. மேலும் பயணிகளின் உடைமைகள் உள்ளிட்டவற்றை காவலர்கள் உதவியுடன் அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.

News January 19, 2025

மயிலாடுதுறைக்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (ஜன.18) முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 30 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஜன.19) மதியம் 1 வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 19, 2025

மயிலாடுதுறை: 86% பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்க்கரை, வேஷ்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அரசின் பரிசுத்தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் 86% அட்டைதாரர்கள் மட்டுமே பரிசுத்தொகுப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 39,620 பேர் பரிசுத்தொகுப்பு பெற ஆர்வம் காட்டவில்லை.

News January 18, 2025

மயிலாடுதுறை மாணவர்கள் வெற்றி

image

சேலம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட சார்பாக கருப்பு-சிவப்பு சீருடை அணிந்த சீனியர் பெண்கள் கபடி அணி முதல் லீக் சுற்றில் தருமபுரி மாவட்ட அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றியினை பதிவு செய்த விளையாட்டு வீராங்கனைகள், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் ரஜினி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News January 18, 2025

மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகையையொட்டி 33 பேர் கைது

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டதன்படி, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 1,489 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News January 18, 2025

தை வெள்ளி கோவிலில் தரிசனம் செய்த ஆதீனம்

image

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று இரவு தை வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் கலந்து கொண்டு வழிபாடு செய்த்தார். தை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்பாள் வீதி உலா நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News January 17, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நடவடிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் சிறப்பு வேட்டை நடைபெற்றது. இதில் கடந்த 4 நாட்களில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 33 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம் 1489 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!