Mayiladuthurai

News January 23, 2025

மயிலாடுதுறை குத்தாலம் இடையே ரயில் ரத்து

image

மயிலாடுதுறையிலிருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் கவனத்திற்கு இன்று 23.1.25 வியாழக்கிழமை காலை 12.10 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு திருச்சி திண்டுக்கல் மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில் குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். குத்தாலம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது என மயிலாடுதுறை ரயில்வே பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

News January 23, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பொறையார், கொள்ளிடம், மாங்கனப்பட்டு, தைக்கால், புத்தூர், அனுக்கிரகத்துக்காக, கோபாலபுரம், குத்தாலம், பாலையூர், கந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News January 22, 2025

இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் 2வது தெரு பாலாஜி நகர் பூம்புகார் சாலை மயிலாடுதுறை 609001 என்ற முகவரி/ 9499055904 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொள்ளவும்”

News January 22, 2025

மயிலாடுதுறை: இழப்பீடு வழங்க பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

image

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. நானும் டெல்டாக்காரன் என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலின் கடினமான இந்த நேரத்தில் உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News January 22, 2025

மயிலாடுதுறை: ஜனவரி 24-ல் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் யூனியன் கிளப் சார்பில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் ஜனவரி 24 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தகுதி சான்றுகளுடன் நேரில் அணுகி பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. share it now..

News January 21, 2025

குத்தாலம்: ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நாளை ஜனவரி 22ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் நாளை மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி வரை குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் நடைபெறும் என கூறினார்.

News January 21, 2025

ஜனவரி 26இல் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் 26.01.2025 அன்று 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். இதில் ஊராட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 21, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் திருநகரி, மங்கைமடம், முள்ளிபள்ளம், குறவலூர், திருவெண்காடு, பெறையாறு, மேமாத்தூர், கீழபெரும்பள்ளம், காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, சாத்தனூர் பாலூர், வாழ்க்கை, வல்லம், வெள்ளதிடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News January 21, 2025

மயிலாடுதுறையில் பெறப்பட்ட மனுக்களின் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கினர். மேலும் கூட்டத்தின் நிறைவில் மொத்தமாக 244 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கீதா துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News January 20, 2025

திருவிளையாட்டம்: நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து அமைச்சர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாடடம்  சுற்று வட்டார பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

error: Content is protected !!