India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குத்தாலம், கடலங்குடி, பாலையூர் மற்றும் மேக்கரிமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (ஜன.25) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மேற்கண்ட துணை மின்நிலையங்கள் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளிலும் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share It Now..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருவிளையாட்டத்தில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று நெல் கொள்முதல் செய்யும் நெல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மாவட்ட ஆட்சியர் பூம்புகார் எம்.எல்.ஏ உடன் இருந்தனர் .
செங்கோட்டையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16848 ஜனவரி 24,25,27,28,30 ஆகிய தேதிகளில் விருதுநகர்,மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய வழிகளில் மாற்றுப் பாதை வழியாக மயிலாடுதுறை செல்லும் என தென்னக ரயில்வே இயக்கம்அறிவித்துள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் கவனத்திற்கு இன்று 23.1.25 வியாழக்கிழமை காலை 12.10 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு திருச்சி திண்டுக்கல் மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில் குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். குத்தாலம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது என மயிலாடுதுறை ரயில்வே பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பொறையார், கொள்ளிடம், மாங்கனப்பட்டு, தைக்கால், புத்தூர், அனுக்கிரகத்துக்காக, கோபாலபுரம், குத்தாலம், பாலையூர், கந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் 2வது தெரு பாலாஜி நகர் பூம்புகார் சாலை மயிலாடுதுறை 609001 என்ற முகவரி/ 9499055904 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொள்ளவும்”
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. நானும் டெல்டாக்காரன் என்று கூறிக்கொள்ளும் ஸ்டாலின் கடினமான இந்த நேரத்தில் உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் யூனியன் கிளப் சார்பில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் ஜனவரி 24 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தகுதி சான்றுகளுடன் நேரில் அணுகி பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. share it now..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நாளை ஜனவரி 22ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் நாளை மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி வரை குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் நடைபெறும் என கூறினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் 26.01.2025 அன்று 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். இதில் ஊராட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.