Mayiladuthurai

News January 26, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் ஆளுநர் கையால் பரிசு

image

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் கொடிநாள் நிதி வசூலில் மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாமிடம் பெற்றமைக்காக மாண்புமிகு ஆளுநர் திரு என்.ரவி அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்களுக்கு சூழற்கோப்பை வழங்கினார்கள். சூழற்கோப்பை பெற்ற மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

News January 26, 2025

சீர்காழி நூலகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

image

சீர்காழி முழு நேர கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் வெங்கடேசனை நூலக ஆணைக் குழு துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டி மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

News January 26, 2025

நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு தகுதியுடையோர் ஜனவரி-31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, “நீர்நிலைகளை பாதுகாக்கும் சமூக அமைப்புகள், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

News January 26, 2025

மயிலாடுதுறை: பழையாறு கடலில் கரை ஒதுங்கிய மிதவை

image

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தை ஒட்டி கடலில் மர்மமான பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அது கப்பல் நடுக்கடலில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பதற்கு பயன்படுத்தப்படும் போயா என்ற கருவி என்றும் இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

News January 25, 2025

இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 15வது தேசிய வாக்காளர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 25, 2025

3-வது புத்தக திருவிழா 31-ந்தேதி தொடக்கம்

image

குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு 3-வது புத்தகத் திருவிழா இலச்சினை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், மயிலாடுதுறையில் 3வது புத்தக திருவிழா வருகிற ஜன.31-ஆம் தேதி முதல் தொடங்கி பிப்.10-ஆம் தேதி வரை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நடைபெறும் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். share it…

News January 25, 2025

மயிலாடுதுறை: மின் வினியோகம் நிறுத்தம்

image

மயிலாடுதுறை நகர துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.25) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதன் காரணமாக மயிலாடுதுறை, அண்ணாநகர், மூங்கில்தோட்டம், ராஜேஸ்வரி நகர், எல்.பி.நகர், தருமபுரம், அரியமங்கலம், பால்பண்ணை, மன்னம்பந்தல், குளிச்சார் சிட்கோ ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share It Now…

News January 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

image

குத்தாலம் ஒன்றியத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி கப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்யப்பட்டபோது, சுமை தூக்கும் பணியாளர் (பாரதிதாசன்-மேஸ்திரி) நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடமிருந்து கையூட்டு பெறுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 25.01.2025 சனிக்கிழமை அன்று அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் தேங்கியுள்ள நெகிழி கழிவுகளை சேகரிக்கும் இயக்கம் சிறப்பாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பேரியக்கத்தில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

மயிலாடுதுறை: மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

image

குத்தாலம், கடலங்குடி, பாலையூர் மற்றும் மேக்கரிமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (ஜன.25) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மேற்கண்ட துணை மின்நிலையங்கள் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளிலும் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share It Now..

error: Content is protected !!