Mayiladuthurai

News March 29, 2025

வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கிய ஆட்சியர்

image

சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் பணி நியமன ஆணைகளை வழங்கினர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News March 29, 2025

மங்கு, பொங்கு, மரண சனியில் இருந்து விடுபட ?

image

சூரியனார்கோயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். இங்கு சிரசில் சிவலிங்கத்துடன் குழந்தை வடிவில் சனிபகவான் பாலசனியாக அருள்பாலிக்கிறார்.இந்த மண்ணை மிதித்தவரை எமதர்மன் நெருங்க கூடாது என சிவபெருமான் கட்டளையிட்டதாக ஐதீகம். எம பயம் நீக்கும் பால சனிபகவானை வணங்க மங்கு, பொங்கு, மரண சனி ஆகிய மூன்றின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. உடனே Share பண்ணுங்க..

News March 29, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கிராம சபா கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கிராம சபை கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம். ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க..

News March 29, 2025

மயிலையில் வேலைவாய்ப்பு முகாம் 

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பணி பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளார். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்கள்.

News March 28, 2025

மயிலாடுதுறை: திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

image

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

News March 28, 2025

ரூ. 2 1/2 லட்சம் மதிப்பில் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை சுமார் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் ஆணையர் வழங்கினார். முன்னதாக வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் பெறப்பட்ட புகார் மனுக்களின் நிலவரம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

News March 28, 2025

மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

மயிலாடுதுறையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரியில் நாளை (மார்ச்.29) காலை 9 மணி – 3 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதில் பயோடேட்டா, கல்வி சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்கள்.

News March 27, 2025

மயிலாடுதுறை: வாகன தணிக்கையில் 12 நாள்களில் 100 பேர் கைது

image

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி எம். சுந்தரரேசன் மேற்பார்வையில், அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்கள் அபிராமி, ஜெயா மற்றும் போலீஸார் மார்ச் 12 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை 12 நாள்களில் மேற்கொண்ட தீவிர சோதனையில் மது மற்றும் சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். நண்டலார் சோதனைச் சாவடியில் 22 வழக்குகள், நல்லாடை சோதனைச்சாவடியில் 38 வழக்குகள் பதிவாகி உள்ளன.

News March 27, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

image

Whatsapp, Facebook, Instagram போன்ற சமூக வளையதளங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போதோ சாட்டிங் செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள். படங்கள் மற்றும் குரல் பதிவுகளை பதிவு செய்து அவற்றை வேறு வகையில் உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். சந்தேகப்படும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் ஹெல்ப் லைன் நம்பர் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கவும் காவல்துறை கேட்டுக்கொண்டது. Share செய்யுங்கள்

error: Content is protected !!